1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 7
2 தன் முன்னோருடைய தலைநகருக்குள் அவன் புகுந்த போது, அவனுடைய படைவீரர் அந்தியோக்கஸ் என்பவனையும் லிசியாசையும் பிடித்து, அவனுக்கு முன் அவர்களைக் கூட்டி வந்தார்கள்.
3 அவன் அதைக் கேள்விப்பட்டு: அவர்களை என்முன் கொண்டு வராதீர்கள் என்றான்.
4 அவர்களைப் படைவீரர் கொன்று விட்டார்கள். தெமெத்திரியுசும் நாட்டில் அரியணை ஏறினான்.
5 இஸ்ராயேலில் தீயவரும் அக்கிரமிகளும் அவனிடம் வந்தார்கள். தலைமைக்குரு ஆக ஆசை கொண்ட அவர்களுடைய தலைவன் ஆல்சிமுசும் வந்தான்.
6 அவர்கள் அரசனிடம் இஸ்ராயேல் மக்கள் மேல் குற்றம் சாட்டி: உம்முடைய நண்பரெல்லாரையும் யூதாசும் அவன் சகோதரரும் கொன்று, எங்களையும் எங்கள் நாட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள்.
7 ஆதலால், இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதனை அனுப்பும். அவன் போய் எங்களுக்கும் அரசருடைய நாடுகளுக்கும் அவர்கள் செய்துள்ள கொடுமைகளையெல்லாம் பார்க்கட்டும்@ அவர்களுடைய நண்பரையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் தண்டிக்கட்டும் என்றார்கள்.
8 அரசன் தன் நண்பரில் பெரியாற்றுக்கு அப்பக்கம் இருந்த நாட்டில் பெரியவனும், அரசனிடம் உண்மை உள்ளவனுமாக இருந்து ஆண்டு வந்த பாக்கீது என்பவனைத் தேர்ந்து கொண்டு,
9 யூதாஸ் செய்த கொடுமைகளைப் பார்வையிட அவனை அனுப்பி வைத்தான்@ மேலும், கொடியவனான ஆல்சிமுஸ் என்பவனையும் குருவாக ஏற்படுத்தி, இஸ்ராயேல் மக்களைப் பழிவாங்கவும் கட்டளை கொடுத்தான்.
10 அவர்கள் பெரும் படையுடன் யூதேயா நாட்டுக்கு மிக விரைவாய் வந்தார்கள்@ யூதாசிடமும் அவர் சகோதரிடமும் தூதுவர்களை அனுப்பி, கபடமாய்ச் சமாதான வார்த்தைகளைப் பேசினார்கள்.
11 ஆனால், அவர்கள் அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவில்லை. ஏனென்றால், பெரும் படையோடு வந்திருந்ததைக் கண்டனர்.
12 மறை நூலறிஞர் கூடி, நியாயமானவைகளைக் கேட்க ஆல்சிமுசிடமும் பாக்கீதிடமும் சென்றார்கள்.
13 இஸ்ராயேல் மக்களில் அசிதேயர் முதன் முதல் அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.
14 ஏனென்றால், ஆரோன் கோத்திரத்தில் குரு ஒருவன் வந்திருக்கிறான்@ அவன் நம்மை மோசம் செய்ய மாட்டான் என்று சொல்லிக் கொண்டார்கள்.
15 அவனும் அவர்களுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்லி: உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என்று ஆணையிட்டான்.
16 அவர்கள் அவனை நம்பினார்கள்@ அவன் அவர்களில் அறுபது பேரைப் பிடித்து ஒரே நாளில் கொன்றான்.
17 ஏனென்றால், மறைநூலில்: யெருசலேமைச் சுற்றிலும் உம் புனித ஊழியர்களுடைய உடலைச் சிதைத்தார்கள்@ அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்@ அவர்களை அடக்கம் செய்ய ஒருவருமில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.
18 மக்கள் எல்லாரும் பயந்து நடுங்கினார்கள் ஏனெனில் அவர்களிடத்தில் உண்மையும் நீதியும் இல்லை@ தங்கள் வார்த்தையை மீறி, தாங்கள் ஆணையிட்டதற்கு எதிராக நடந்தார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
19 பாக்கீது யெருசலேமை விட்டு அகன்று பெத்சேக்காவைத் தாக்கினான்@ ஆட்களை அனுப்பி, தன்னை விட்டு ஓடிப்போனவர்களைப் பிடித்து, மக்களில் சிலரைக் கொன்று ஒரு பெரும் கிணற்றில் போடும்படி செய்தான்.
20 அந்த நாட்டை ஆல்சிமுசிடம் ஒப்புவித்து, அவனுக்கு உதவியாகச் சில படைகளை விட்டு விட்டு பாக்கீது அரசனிடம் சென்றான்.
21 ஆல்சிமுஸ் தன் குருத்துவத்தை நிலைநிறுத்தக் கூடுமான முயற்சி செய்தான்.
22 மக்களைக் கலகப்படுத்தினவர்கள் எல்லாரும் அவனோடு சேர்ந்து கொண்டு, யூதேயா நாட்டைக் கைப்பற்றி, இஸ்ராயேலுக்கு அதிகத் தீங்கு செய்தார்கள்.
23 ஆல்சிமுசும் அவனுடன் இருந்தவர்களும் புறவினத்தார் செய்ததை விட அதிகமாக இஸ்ராயேல் மக்களுக்குச் செய்த கொடுந் துன்பங்களை யூதாஸ் கண்டு,
24 யூதேயா நாட்டு எல்லைகளைச் சுற்றி வந்து, தம்மை விட்டுப் போனவர்களைப் பழிவாங்கினார். அதன் பிறகு ஒருவரும் தம் நாட்டை விட்டுப் போகவில்லை.
25 யூதாசும் அவருடன் இருந்தவர்களும் அதிக வலிமை மிக்கவர்களென்று ஆல்சிமுஸ் கண்டு, அவர்களை எதிர்ப்பது கூடாதென்று அறிந்து, அரசனிடம் திரும்பிப் போய், அவர்கள் மீது பல குற்றங்களைச் சுமத்தினான்.
26 அரசன் தலையான பிரபுக்களில் ஒருவனான நிக்கானோரை அனுப்பினான். இவன் இஸ்ராயேலின் பகைவன், அம்மக்களை அழித்தொழிக்கும்படி இவனுக்கு அரசன் கட்டளையிட்டான்.
27 நிக்கோனார் பெரும் படையோடு யெருசலேம் வந்து, யூதாசுக்கும் அவர் சகோதரருக்கும் கபடமாய்ச் சமாதான வார்த்தைகளை சொல்லி அனுப்பி: எனக்கும் உங்களுக்குமிடையே சண்டை வேண்டாம்.
28 சமாதானமாய்ச் சிலரோடு உங்களைப் பார்க்க வருவேன் என்று சொல்லி, யூதாசிடம் வந்து ஒருவரை ஒருவர் சமாதானமாய்க் கண்டு கொண்டார்கள்.
29 ஆனால், பகைவர் யூதாசைப் பிடிக்கத் தயாராய் இருந்தார்கள்.
30 அவன் தம்மைக் கபடமாய்ப் பிடித்துக் கொள்ள வந்தானென்று யூதாஸ் அறிந்து, அவனுக்கு அஞ்சி, அவனைத் திரும்பவும் பார்க்க மனமில்லாதவராய் இருந்தார்
31 நிக்கானோர் தன் எண்ணம் வெளியாகிவிட்டதை அறிந்து, காப்பார்சலாமா அருகில் யூதாசை எதிர்த்துப் போர் செய்யப் போனான்.
32 நிக்கானோர் படையில் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் மாண்டார்கள்@ மற்றவர்கள் தாவீதின் நகரத்துக்கு ஓடிப் போனார்கள்.
33 இதன் பிறகு நிக்கானோர் சீயோன் மலையில் ஏறினான். மக்களுடைய குருக்களில் சிலர் அவனைச் சந்திக்கவும், அரசனுக்குக் கொடுக்கும் காணிக்கைகளை அவனிடம் கொடுக்கவும் சென்றார்கள்.
34 அவன் அவர்களைக் கேலி செய்து நிந்தித்து இகழ்ந்தான்@ செருக்குடன் பேசினான்@ கோபமாய்ச் சபதம் கூறி:
35 யூதாசும் அவன் படையும் என் கையில் காட்டிக் கொடுக்கப்படாமல் போனால், வெற்றி வீரனாய் நான் திரும்பி வரும் போது உங்கள் ஆலயத்தைக் கொளுத்தி விடுவேன் என்று சொல்லி, வெகு கோபமாய்ப் போய் விட்டான்.
36 குருக்கள் உட்புகுந்து, பீடத்துக்கும் ஆலயத்துக்கும் முன்பாக நின்றுகொண்டு, அழுகையோடு:
37 ஆண்டவரே, உம்முடைய பெயரைப் போற்றுவதற்கு இந்த ஆலயத்தைத் தேர்ந்துகொண்டீர். உம் மக்கள் உம்மை நோக்கி வேண்டவும், உமது உதவியை மன்றாடவும் ஏற்பட்ட இடமன்றோ இது?
38 அந்த மனிதனையும் அவன் படைகளையும் பழிவாங்கும். அவர்கள் வாளுக்கு இரையாகக்கடவார்கள். அவர்கள் சொன்ன தெய்வ நிந்தைகளை நினைவு கூர்ந்து, அவர்கள் வாழும்படி விட்டுவிடாதீர் என்று மன்றாடினார்கள்.
39 நிக்கானோர் யெருசலேமை விட்டு நீங்கிப் பெத்தோரோனில் பாளையம் இறங்கினான். அவ்விடத்தில் சீரியா படையும் அவனைச் சேர்ந்துகொண்டது.
40 யூதாசும் மூவாயிரம் பேரோடு அதார்சாவில் பாளையம் இறங்கி, கடவுளை நோக்கி:
41 ஆண்டவரே, சொன்னாக்கெரியு என்னும் அரசனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைத் தெய்வ நிந்தை சொன்னதால் வானதூதர் போய் அவர்களில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர்களைக் கொலை செய்தார்.
42 அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையையும் அழித்தருளும். அவன் உம்முடைய ஆலயத்தைப் பற்றித் தெய்வ நிந்தை சொன்னானென்று மற்றவர்கள் அறியட்டும். அவன் கெட்ட எண்ணத்திற்கு ஏற்றபடி அவனைத் தண்டித்தருளும் என்று வேண்டினார்.
43 ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவர்கள் போர்செய்தார்கள். நிக்கானோர் படை தோல்வி அடைய, அவனே முதலில் மடிந்தான்.
44 நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவன் படைவீரர் தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
45 அதார்சா முதல் காசாரா வரும் வரை அவர்களை ஒருநாள் முழுவதும் பின்தொடர்ந்து, பிறருக்கு அறிவிக்கும் படியாக அவர்களுக்குப் பின்னால் இவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்.
46 சுற்றுப்பக்கத்து யூதேயா ஊர்களின் மக்களெல்லாம் புறப்பட்டு, மிக்கத் துணிவோடு அவர்களைத் தாக்கினார்கள்@ மறுபடியும் அவர்களை எதிர்த்து எல்லாரையும் கொன்றார்கள்.
47 தப்பிப்பிழைத்தவன் ஒருவனும் இல்லை. அவர்கள் பொருட்களைக் கொள்ளை அடித்தார்கள்@ நிக்கானோர் தலையையும், அவன் அகந்தையோடு நீட்டிக் காட்டின வலக்கையையும் வெட்டி வந்து யெருசலேமுக்கு முன்பாகத் தொங்க விட்டார்கள்.
48 மக்கள் மிக்கக் களிப்புற்று அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடினர்.
49 ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாளாகிய அந்நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்.
50 சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், நிக்கானோர், விட்டு, அவர்களை, யூதேயா, ஏற்பாடு, போய், அரசனிடம், பெரும், அனுப்பி, வந்து, இஸ்ராயேல், பழைய, மக்கள், சொல்லி, யூதாசும், யூதாஸ், பாக்கீது, அரசன், நாட்டை, மக்கபே, அந்த, செய்ய, கொண்டார்கள், கண்டு, ஏனென்றால், அறிந்து, சமாதான, ஆல்சிமுஸ், உம்முடைய, கொண்டு, கொன்று, தெய்வ, ஆகமம், பிடித்து, விட்டார்கள், நாட்டில், படைவீரர், அவனுக்கு, ஆண்டு, பாளையம், இருந்தவர்களும், மாதம், யெருசலேமை, தங்கள், பதின்மூன்றாம், செய்தான், ஆதார், நிந்தை, ஆண்டவரே, படையும், அவனைச், எல்லாரும், மற்றவர்கள், அவனைத், பார்க்க, நோக்கி, பிறகு, முன்பாக, வரும், விட்டுப், கபடமாய்ச், அவர்களைக், என்பவனையும், வந்தார்கள், ஏறினான், அவனிடம், போது, திருவிவிலியம், புறப்பட்டு, ஆன்மிகம், சேர்ந்து, அவ்விடத்தில், வந்தான், அவர்களுடைய, ஆல்சிமுசும், கொள்ள, செய்து, சொல்லிக், உங்கள், தீங்கு, மக்களில், சென்றார்கள், அவனை, செய்த, அவர், புனித, படையோடு, அவர்களில்