1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 அதில் சொல்லப்பட்டவை என்னவென்றால்: தலைமைக்குரு சீமோனுக்கும் யூத குலத்தாருக்கும் அந்தியோக்கஸ் மன்னர் வாழ்த்துக் கூறுகிறோம்.
3 நம்முடைய முன்னோரின் நாட்டைச் சில தீயவர் கைப்பற்றிக் கொண்டபடியால், நாம் அதைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொணரத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காகவே சிறந்த சேனையையும் போர்க் கப்பல்களையும் சேகரித்திருக்கிறோம்.
4 நம்முடைய நாட்டிற்குத் தீமை செய்தவர்களையும், நம் ஆட்சிக்குட்பட்ட பல நகரங்களையும், அழித்தவர்களையும் பழிவாங்குவதற்காக நாட்டினுள் புக மனம் கொண்டுள்ளோம்.
5 ஆதலால், நமக்கு முன்னிருந்த அரசர்கள் அனைவரும் உனக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும், உனக்கு வழங்கியிருந்த எல்லாக் கொடைகளையும் நாமும் இப்போது ஏற்றுக் கொள்கிறோம்.
6 உன் நாட்டில் உன் பெயரால் நாணயம் அடிக்க அனுமதி அளிக்கிறோம்.
7 யெருசலேம் நகர் புனிதமானதாகவும் சுதந்திரம் உள்ளதாகவுமிருக்கவும், செய்யப்பட்ட எல்லாப் போர்க் கருவிகளும், நீ கட்டி வாழ்ந்து வரும் கோட்டைகளும் உன் ஆளுகையின் கீழ் இருக்கவும் உத்தரவளிக்கிறோம்.
8 கடந்த காலத்துக்கும் வருங்காலத்திற்கும், இன்று முதல் எப்போதைக்கும் அரசருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடன்களெல்லாம் உனக்கு மன்னிக்கப்பட்டன.
9 நமது நாட்டை நாம் அடைந்த பிறகு, உங்கள் பெயர் பூவுலகெங்கும் விளங்கும்படி, உன்னையும் உன் இனத்தாரையும் ஆலயத்தையும் பெரிதும் மாட்சிப்படுத்துவோம்.
10 நூற்றெழுபத்து நான்காம் ஆண்டு அந்தியோக்கஸ் தன் முன்னோரின் நாட்டினுள் புகுந்தான். எல்லாப் படைகளும் அவனைச் சேர்ந்து கொண்டன. ஆதலால், திரிபோனுடன் சிலர் மட்டுமே தங்கியிருந்தனர்.
11 அந்தியோக்கஸ் மன்னன் அவனைப் பின் தொடரவே, அவன் கடலோரமாய் ஓடித் தோராவை அடைந்தான்.
12 ஏனென்றால், தன் மேல் பழிகள் பல சுமத்தப்பட்டிருப்பதையும், தன் படைகள் தன்னை விட்டகன்றதையும், அறிந்திருந்தான்.
13 அந்தியோக்கஸ் நூற்றிருபதினாயிரம் படை வீரரோடும், எண்ணாயிரம் குதிரை வீரரோடும் தோரா நகரைத் தாக்கினான்.
14 நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டு, கப்பல்களும் அருகில் வரும்படி செய்தான்@ கடற்பக்கமும் தரைப்பக்கமும் நகரை நெருக்கி, எவனும் வெளியே போகாமலும் உள்ளே நுழையாமலும் செய்தான்.
15 அரசர்களுக்கும் பல இனத்தாருக்கும் எழுதப்பட்ட கடிதங்களோடு நுமேனியுசும் அவனுடன் இருந்தவர்களும் உரோமையினின்று திரும்பி வந்தார்கள்.
16 அவைகளில்: உரோமையருடைய தூதர் லூசியுஸ் தோலெமேயுஸ் மன்னனுக்கு வாழ்த்துகள்.
17 யூதருடைய தலைமைக்குருவான சீமோனாலும் யூத மக்களாலும் முன் செய்திருந்த சமாதான உடன்படிக்கையையும் நட்பையும் புதுப்பிக்கும்படி அனுப்பப்பட்ட எங்கள் நண்பரான யூத பிரதிநிதிகள் எங்களிடம் வந்தார்கள்.
18 அவர்கள் ஆயிரம் பொற்காசு நிறையுள்ள பொன்கேடயம் ஒன்று கொண்டு வந்தார்கள்.
19 ஆதலால், அவர்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கும், அவர்களை எதிர்த்துப் போர்செய்கிறவர்களுக்கு உதவி செய்யாதபடிக்கும் அரசர்களுக்கும் நாடுகளுக்கும் எழுதுகிறோம்.
20 அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக்கொள்வது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.
21 ஆதலால், தீயவர் யாரேனும் அவர்கள் நாட்டினின்று உங்களிடம் ஓடி வந்து விடுவார்களேயானால், தங்கள் சட்டப்படி அவர்களைப் பழிவாங்கும்படியாகத் தலைமைக்குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்து விடுங்கள் என்று எழுதியிருந்தது.
22 இவ்வாறே தெமெத்திரியுஸ் மன்னனுக்கும், அத்தாலுஸ், அரியார்த்துஸ், அர்சாக்கஸ் மன்னர்களுக்கும்,
23 எல்லா நாடுகளுக்கும், லாம்சாக்கஸ், ஸ்பார்த்தியர், தேலோஸ், மிந்தோஸ், சீசியோன், காரியா, சாமோஸ், பாம்பீலியா, லீசியா, அலிக்கார்நாசுஸ், கோவோ, சீதெ, அராதுஸ், ரோதுஸ், பாசேலிதஸ், கார்த்தீனா, நீதுஸ், சீப்புருஸ், சிரேனே, முதலிய இனத்தாருக்கும் நாடுகளுக்கும் எழுதியிருந்தது.
24 அவர்கள் இதன் நகலைத் தலைமைக்குரு சீமோனுக்கும் யூதமக்களுக்கும் அனுப்பினார்கள்.
25 அந்தியோக்கஸ் மன்னன் திரும்பவும் தோரா நகரைத் தாக்கி, போரில் பலப் பொறிகளை பயன்படுத்தி எதிர்த்தான். திரிபோன் தப்பித்துக் கொள்ளாதபடி அவனை அடைத்து வைத்தான்.
26 சீமோன் அவனுக்கு உதவியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரம் வீரரும், வெள்ளியும் பொன்னும் திரளான பாத்திரங்களும் அனுப்பினார்.
27 ஆனால், அந்தியோக்கஸ் அவற்றை ஏற்றக்கொள்ள மனமில்லாமல், சீமோனுடன் தான் செய்திருந்த உடன்படிக்கையை உதறி விட்டு அவரை விட்டகன்றான்.
28 அதன் பிறகு, சீமோனுடன் பேச்சு நடத்தத் தன் நண்பரில் ஒருவனான அத்தேனோபியுசை அனுப்பி: நீங்கள் எமது நாட்டின் நகரங்களாகிய யோப்பா, காசாரா, யெருசலேம் கோட்டை இவைகளைக் கைப்பற்றி இருக்கிறீர்கள்.
29 அவைகளைக் கொடுமைப்படுத்தி, நாட்டில் பெருந்தீமைகள் புரிந்து, எமது நாட்டின் பல இடங்களில் ஆட்சி செலுத்துகிறீர்கள்.
30 இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களை விட்டு விட்டு, யூதேயாவின் எல்லைக்கு அப்பால் நீங்கள் ஆட்சி செலுத்தி வந்த நாடுகளின் திறையைச் செலுத்தி விடுங்கள்.
31 இல்லாவிடில் அவைகளுக்காக ஐந்நூறு வெள்ளித் தாலேந்துகளுக்காகக் கட்டவேண்டிய கப்பங்களுக்கும் பதிலாக வேறு ஐந்நூறு தாலேந்துகளும் கட்டி விடுங்கள். தவறினால் உங்களைத் தாக்குவோம் என்று சொல்லச் சொன்னான்.
32 மன்னனின் நண்பன் அந்தேனோபியுஸ் யெருசலேம் வந்து, சீமோனுடைய ஆடம்பர மாட்சியையும், பொன்னும் வெள்ளியும் நிறைந்திருந்த மகிமையையும், எங்கும் விளங்கிய அலங்காரத்தையும் கண்டு வாயடைத்து நின்றான்.
33 மன்னனுடைய வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தான். சீமோன் அவனுக்கு மறுமொழியாக: நாங்கள் அன்னிய நாட்டைப் பிடித்துக் கொள்ளவுமில்லை@ அன்னியப் பொருட்களை வைத்துக் கொள்ளவுமில்லை. ஆனால், எங்கள் பகைவரால், சிறிது காலமாக அநியாயமாய்ப் பறிக்கப்பட்டிருந்த எங்கள் முன்னோரின் சொத்துக்களைத் திரும்பப் பெற்றுள்ளோம்.
34 தக்க சமயம் வாய்த்தமையால் எங்கள் முன்னோரின் சொத்துகளை நாங்கள் திரும்பவும் அடைந்தோம்.
35 ஆனால், நீ கோரும் யோப்பா, காசாராவைப் பொறுத்த மட்டில், அந்நகரங்கள் எங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் பெருந்தீமைகள் செய்தன. ஆயினும், அவைகளுக்காக நூறு தாலேந்துகள் கொடுப்போம் என்று கூறினார். அத்தேனோபியுஸ் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
36 மன்னனிடம் கோபமாய்த் திரும்பிப் போய், தான் கேட்டதையும் சீமோனின் மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான். மன்னன் பெரும் சினங்கொண்டான்.
37 இதற்கிடையே திரிபோன் ஒர்த்தோசியாதாவுக்கு கப்பலில் ஓடிப்போனான்.
38 அந்தியோக்கஸ் மன்னன் செந்தேபேயுசைக் கடற்கரைப் பகுதிக்குத் தலைவனாக நியமித்து, காலாட் படையையும் குதிரைப் படையையும் அவனிடம் ஒப்படைத்தான்.
39 யூதேயா நாட்டுக்கு எதிரில் பாளையம் இறங்கவும், கெதோரைக் கட்டவும், நகரத்தின் கதவுகளை அடைக்கவும், மக்களை எதிர்க்கவும் அவனுக்குக் கட்டளையிட்டான். மன்னனோ திரிபோனைப் பின்தொடர்ந்து போனான்.
40 செந்தேபேயுஸ், யாம்னியா சேர்ந்து மக்களை வதைக்கவும், யூதேயா நாட்டைக் கொள்ளையடிக்கவும், மக்களைச் சிறைசெய்யவும் சாகடிக்கவும், கெதோரைக் கட்டவும் தொடங்கினான்.
41 மன்னன் கட்டளைப்படி யூதேயா நாட்டில் புகுந்து நடமாட, அவ்விடத்தில் குதிரைப் படையையும் சேனைகளையும் நியமித்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அந்தியோக்கஸ், மன்னன், எங்கள், ஏற்பாடு, பழைய, முன்னோரின், ஆதலால், மக்கபே, யெருசலேம், உனக்கு, நாட்டில், கொண்டு, தான், படையையும், யூதேயா, நீங்கள், விட்டு, விடுங்கள், அவனுக்கு, நாடுகளுக்கும், வந்தார்கள், திரும்பவும், ஆகமம், எல்லா, சீமோனுக்கும், எமது, நாட்டின், யோப்பா, பெருந்தீமைகள், ஆன்மிகம், சீமோனுடன், வெள்ளியும், பொன்னும், ஆட்சி, தெமெத்திரியுஸ், அவைகளுக்காக, குதிரைப், கெதோரைக், கட்டவும், மக்களை, திருவிவிலியம், நாங்கள், சீமோன், ஐந்நூறு, மாட்சியையும், அறிவித்தான், செலுத்தி, திரிபோன், தோரா, வீரரோடும், நகரைத், நாம், அரசர்களுக்கும், சேர்ந்து, பிறகு, இப்போது, போர்க், எல்லாப், கட்டி, இனத்தாருக்கும், தீயவர், வந்த, வந்து, மக்களுக்கும், எழுதியிருந்தது, தலைமைக்குரு, அவர்களை, தலைமைக்குருவான, செய்திருந்த, நம்முடைய, செய்யாதபடிக்கும், நாட்டினுள்