1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 5
2 தங்கள் மத்தியில் இருந்த யாக்கோபு குலத்தை அழித்தொழிக்க நினைத்து, அவர்களைக் கொல்லவும் கொடுமைப் படுத்தவும் ஆரம்பித்தார்கள்.
3 இதுமேயாவில் எசாயுவின் மக்களும், அக்கிராபத்தானேயில் இருந்தவர்களும் இஸ்ராயேலரைச் சூழ்ந்து கொண்டபடியால், யூதாஸ் அவர்களோடு போர் புரிந்து பெரிதும் சேதப்படுத்தினார்.
4 தம் மக்களைப் பிடிப்பதற்குக் கண்ணி போலும், படுகுழிபோலுமிருந்த பேயான் மக்களுடைய கெட்ட எண்ணத்தை அறிந்திருந்த அவர், வழியில் பதுங்கி ஏற்ற காலத்தை எதிர்நோக்கி இருந்தார்.
5 கோபுரங்களில் அவர்களைச் சூழ்ந்து வளைத்து, வெளியில் விடாமல் காத்து, அவர்களைத் துன்பப்படுத்தி, அவர்கள் இருந்த கோபுரங்களையும் அவற்றில் உள்ளவைகளையும் தீக்கு இரையாக்கினார்
6 அவர் அம்மோன் குலத்தவரிடம் சென்று, வலிமை மிக்க சேனையையும், திரளான மக்களையும், அவர்கள் தலைவனாய் இருந்த திமோத்தேயுஸ் என்பவனையும் கண்டார்.
7 அவர்களோடு போர்கள் பல புரிந்து, அவர்களை வதைத்து அழித்தார்.
8 காசேர் நகரையும், அதைச் சேர்ந்த நாடுகளையும் பிடித்த பிறகு யூதேயா நாடு திரும்பினார்.
9 கலாத்தில் இருந்த மக்கள் தங்கள் எல்லைகளுக்குள்ளாக இருந்த இஸ்ராயேலரை அழிக்கப் படைதிரட்டினார்கள். எனவே, இவர்கள் தாத்தேமான் கோட்டைக்கு ஓடிப்போனார்கள்.
10 யூதாசுக்கும் அவர் சகோதரருக்கும் இவர்கள் எழுதி அனுப்பினதாவது: சுற்றுப் பக்கத்து மக்கள் எங்களை ஒழித்துவிட ஒன்று கூடியிருக்கிறார்கள்.
11 நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் கோட்டையைப் பிடிக்க ஆயத்தம் செய்கிறார்கள். திமோத்தேயுஸ் என்பவன் அவர்கள் படைத்தலைவன்.
12 ஆதலால், இப்போது நீர் வந்து, ஏற்கனவே எங்களுக்குள் பலர் கொல்லப்பட்டமையால், எங்களை அவர்கள் கைகளினின்று காப்பாற்ற வேண்டும்.
13 துபினைச் சுற்றிலுமிருந்த எங்கள் சகோதரர் எல்லாரும் கொலையுண்டார்கள். அவர்கள் மனைவியரையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினார்கள்@ நாட்டைக் கொள்ளையடித்தார்கள். ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொலை செய்தார்கள்.
14 இப்படியாக வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கலிலேயா நாட்டிலிருந்து கிழிந்த ஆடைகளோடு வேறு தூதர்கள் வந்து,
15 தங்களுக்கு எதிராய்த் தோலெமாயிதா, தீர், சீதோன் நகரத்தார் ஒன்று கூடியிருக்கிறார்கள். என்றும், தங்களை அழித்தொழிக்கக் கலிலேயா நாடு முழுவதும் அன்னியர் வந்து நிறைந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
16 யூதாசும் மற்றவரும் இந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்ட போது பெரிய கூட்டமொன்று கூட்டி, ஆபத்திலும், பகைவராலும் அழிந்தொழியும் தருணத்திலும் இருந்த தங்கள் சகோதரருக்குத் தாங்கள் செய்ய வேண்டியதைப் பற்றித் தீர்மானித்தார்கள்.
17 யூதாஸ் தம் சகோதரனான சீமோனை நோக்கி: நீ வீரரைத் தேர்ந்து கொண்டு கலிலியா நாட்டிலுள்ள உன் சகோதரரை மீட்கச் செல். நானும், என் சகோதரன் யோனத்தாசும் கலாத்தியாவுக்குப் போவோம் என்றார்.
18 யூதேயாவைக் காப்பதற்காக சக்கரியாசின் புதல்வன் சூசையையும், அசாரியாசையும் மக்கட் தலைவர்களாக மீதிப் படைகளோடு விட்டுவிட்டு:
19 இம்மக்களுக்குத் தலைவர்களாய் இருங்கள்@ நாங்கள் திரும்பி வரும் வரையிலும் பகைவரோடு போர் செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சென்றார்.
20 கலிலேயா நாடு செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரரும், கலாத்திம் செவ்தற்காக யூதாசுக்கு எண்ணாயிரம் பேரும் நியமிக்கப்பட்டார்கள்.
21 சீமோன் கலிலேயாவுக்குச் சென்று புறவினத்தாரோடு பல போர்கள் செய்தான். அவர்கள் அவன் முன்பாகப் பயந்து ஓடினார்கள். அவன் தோலெமாயிதா நகர் வரைக்கும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
22 அவர்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர்வரை மாண்டார்கள். அவன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்தான்.
23 கலிலேயாவிலும் ஆர்பாத்திலும் இருந்தவர்களை அவர்களுடைய மனைவி மக்களோடும், அவர்களுக்குச் சொந்தமான பொருட்கள் எல்லாவற்றோடும் தன்னோடு கூட்டிக் கொண்டு மகிழ்ச்சியாய் யூதேயா நாட்டுக்கு வந்தான்.
24 யூதாஸ் மக்கபேயுசும், அவர் சகோதரன் யோனத்ததாசும் யோர்தான் நதியைக் கடந்து மூன்று நாட்களாகப் பாலைவனத்தில் நடந்தார்கள்.
25 நாபுத்தேயமார் அவர்களை எதிர்கொண்டு போய், அவர்களைச் சமாதானமாய் ஏற்றுக் கொண்டு, கலாத்தில் அவர்கள் சகோதரருக்கு நடந்த யாவற்றையும் வெளிப்படுத்தினார்கள்.
26 மேலும், வலிமை மிக்க மிகப்பெரிய கோட்டைகளாகிய பராசா, போசோர், அலிமிஸ், காஸ்போர், மாஜெத், கார்னாயிம் என்ற இடங்களில் பலர் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
27 இன்னும் கலாத் நாட்டின் மற்ற நகரங்களிலும் பலர் அடைபட்டிருப்பதாயும், ஒரே நாளில் அவர்களைப் பிடித்து எல்லாரையும் அழித்தொழிப்பதற்குப் பகைவர் படைகள் மறுநாளே வரத் தீர்மானித்திருப்பதாயும் சொன்னார்கள்.
28 ஆதலால், யூதாசும் தம் படையைத் திருப்பிப் பாலைவனம் வழியாய்ப் போசோர் நகரத்துக்கு உடனே சென்று, அந்நகரத்தைப் பிடித்தார்@ ஆடவர் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கி, நகரத்தைக் கொள்ளையடித்துக் கொளுத்தி விட்டார்.
29 பிறகு அவர்கள் இரவு வேளையில் புறப்பட்டுக் கோட்டை வரை சென்றார்கள்.
30 பொழுது விடியும் வேளை கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், கோட்டையைப் பிடிப்பதற்கும், அதிலுள்ளவர்களைத் தாக்குவதற்கும் ஏணிகளோடும் ஆயுதங்களோடும் வந்த எண்ணிலடங்காத மக்கட் திரளைக் கண்டார்கள்.
31 போர் தொடங்கி விட்டதென்று யூதாஸ் கண்டார். எக்காள ஒலி போலப் போர்க்குரல் வானத்தை எட்டியது. நகரத்தின் உள்ளேயிருந்தும் கூக்குரல் எழுந்தது.
32 ஆதலால், அவர் தம் படையை நோக்கி: இன்று உங்கள் சகோதரருக்காகச் சண்டை செய்யுங்கள் என்றார்.
33 தம் படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பகைவர் பின்னால் நடந்தார். அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்@ ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் வேண்டினார்கள்.
34 திமோத்தேயுசின் படை வீரர் மக்கபேயுஸ் தான் வருகிறாரென்று அறிந்தவுடனே அவர் முன் ஓட்டம் பிடித்தார்கள். யூதாஸ் அவர்களைப் பெரிதும் துன்புறுத்த, அன்று அவர்களில் எண்ணாயிரம் பேர் வரை கொலையுண்டார்கள்.
35 யூதாஸ் மாஸ்பாவை நோக்கி நடந்து, அதைத் தாக்கிப் பிடித்தார்@ ஆடவர் எல்லாரையும் கொன்று, நகரத்தைக் கொள்ளையடித்துக் கொளுத்தி விட்டார்.
36 அவ்விடமிருந்து புறப்பட்டுக் கலாத் நாட்டிலே காஸ்போன், மாஜெத், போசார், இன்னும் மற்ற நகரங்களையும் பிடித்தார்.
37 அதன் பிறகு திமோத்தேயுஸ் வேறொரு படை திரட்டி ஆற்றுக்கு அக்கரையில் இராபோன் நகருக்கு எதிரில் பாளையம் இறங்கினான்.
38 யூதாஸ் பகைவர் படையை உளவு பார்க்க ஆட்களை அனுப்ப, அவர்கள் திரும்பி வந்து: நம்மைச் சுற்றிலும் இருக்கும் இனத்தாரெல்லாம் அவனோடு சேர்ந்து பெரும்படையாய் இருக்கிறார்கள்.
39 தங்களுக்கு உதவியாக அராபியரையும் கூட்டி வந்து, உம்மோடு போர் செய்ய ஆயத்தமாகி, ஆற்றுக்கு அப்புறம் பாளையம் இறங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். யூதாஸ் அவர்களை எதிர்த்துச் சென்றார்.
40 அப்பொழுது திமோத்தேயுஸ் தன் படைகளோடு ஆற்றின் அருகில் வந்து, அவனே முதலில் ஆற்றைக் கடந்து நம்மிடம் வந்தாலொழிய நாம் அவனை எதிர்ப்பது கூடாது. ஏனென்றால், வலிமை மிகுந்திருப்பதால் அவன் நம்மைத் தோற்கடிப்பான்.
41 ஆற்றைக் கடக்கப் பயந்து அக்கரையில் பாளையம் இறங்குவானேயாகில், நாமே அக்கரைக்குச் சென்று அவனை எதிர்க்கலாம் என்று மொழிந்தான்.
42 ஆற்றங்கரையை அடைந்த யூதாஸ், அங்கே பெரியோரை நிறுத்தி: ஒருவரையும் விட்டு விடாதீர்கள்@ ஆனால், எல்லாரும் போர்புரிய வரட்டும் என்று சொல்லி, முதன் முதல் தாமே தம் மக்களோடு ஆற்றைக் கடந்தார்.
43 பகைவர்கள் முறியடிக்கப்பட்டு, தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டுக் கார்னாயிமில் இருந்த கோயிலுக்குள் ஓடிப்போனார்கள்.
44 அவர் நகரத்தைப் பிடித்து, கோயிலையும் அதில் இருந்தவர்களையும் நெருப்புக்கு இரையாக்கினார். கார்னாயிம் நகரம் அழிந்து, யூதாசின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் போயிற்று.
45 யூதாஸ், கலாத்தில் இருந்த சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லா இஸ்ராயேலரையும், அவர்கள் மனைவி மக்களையும், ஒரு பெரும் படையையும் யூதேயா நாடு செல்வதற்காகச் சேர்த்தார்.
46 அவர் எப்பிரோன் வரையிலும் வந்தார். போகும் வழியில் கட்டப்பட்டிருந்த அப்பெரிய நகரம் மிகவும் வலுப்படுத்தப்பட்டதென்றும், வலப்பக்கமோ இடப்பக்கமோ போக வழியில்லை, நகரத்தின் நடுவில் தான் போக வேண்டுமென்றும் கண்டார்.
47 நகரில் இருந்தவர்கள் அதிலேயே ஒளிந்து கொண்டு, கதவுகளைக் கற்களால் அடைத்திருந்தார்கள். யூதாஸ் அவர்களை நோக்கி:
48 நாங்கள் எங்களுடைய நாடு போய்ச் சேர்வதற்கு உங்கள் நகரத்தின் வழியாய்ப் போகிறோம். ஒருவரும் உங்களுக்குத் தீங்கு செய்யார். நாங்கள் கால்நடையாய்த் தான் போவோம் என்று சமாதான வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினார்.
49 கதவுகளைத் திறக்க அவர்களுக்கும் மனம் வரவில்லை. யூதாஸ், அவனவன் தான் இருந்த இடத்துக்கு முன்பாகவே நகரைத் தாக்க வேண்டுமென்று பாளையத்தில் அறிக்கையிடும்படி செய்தார்.
50 வீரர்களும் அவ்விதமே செய்தார்கள், பகல் முழுவதும் இரவு முழுவதும் அந்த நகரத்தைத் தாக்கி, அவர் அதைப் பிடித்தார்.
51 ஆடவர் எல்லாரும் வாளால் மடிந்தார்கள். அவர் நகரை அழித்தார்@ பொருட்களைக் கொள்ளையடித்து, கொலையுண்டவர்களைத் தாண்டி நகரத்தைக் கடந்தார்.
52 யோர்தானைக் கடந்து பெத்சான் நகரத்துக்கு எதிரில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் போகையில்,
53 யூதாஸ் எல்லாருக்கும் பின்னால் (கடைசியில்) வந்தவர்களுடன் சேர்ந்து நடந்து யூதேயா நாடு சேருமட்டும் வழி முழுமையும் தம் மக்களுக்குத் திடம் சொல்லிக் கொண்டு வந்தார்.
54 அவர்கள் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சீயோன் மலை ஏறி தங்களில் யாரும் அழிவுறாமல் அமைதியாய்த் திரும்பி வந்ததற்காகப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.
55 கலாத் நாட்டில் யூதாசும் யோனத்தாசும் இருந்த காலத்திலும், தோலெமாயிதை எதிர்த்துக் கலிலேயாவில் அவர் சகோதரன் சீமோன் இருந்த காலத்திலும்,
56 அவர்கள் அடைந்த வெற்றிகளையும் புரிந்த போர்களையும் சக்காரியாஸ் புதல்வன் சூசையும், படைத்தலைவன் அசாரியாவும் கேள்விப்பட்டு:
57 நாமும் நமது பெயர் விளங்கும்படி செய்வோம்@ நம்மைச் சுற்றிலும் இருக்கும் மக்களை எதிர்த்துச் சண்டை செய்வோம் என்று சொல்லி,
58 தங்கள் படைகளைச் சேர்த்து யாம்னியாவை எதிர்த்துப் போனார்கள்.
59 கோர்ஜியா என்பவன் நகரத்துக்கு வெளியே வந்து அவர்களை எதிர்த்துப் போர்தொடுத்தான்.
60 சூசையும் அசாரியாவும் யூதேயா எல்லைகள் வரை ஓடினார்கள். அன்று இஸ்ராயேல் மக்களில் இரண்டாயிரம் பேர் மாண்டனர். மக்கள் பெரும் தோல்வி அடைந்து ஓடினார்கள்.
61 ஏனென்றால், தாங்கள் வீரமிக்கவர்கள் ஆவோம் என்று எண்ணி, யூதாசும் அவர் சகோதரரும் சொன்னவற்றைக் கேளாததனால் தான் இப்படித் தோல்வி அடைந்தார்கள்.
62 இஸ்ராயேலுக்கு மீட்பு உண்டானது அவர்கள் கோத்திரத்தாரால் அன்று.
63 யூதாசின் படைகளோ இஸ்ராயேல் அனைவராலும், அவர்கள் பெயரைக் கேள்விப்பட்ட எல்லா இனத்தாராலும் கொண்டாடப் பட்டன.
64 எல்லாரும் அவர்களை எதிர் கொண்டு போய் மகிழ்ச்சியாய் அழைத்து வந்தார்கள்.
65 யூதாசும் அவர் சகோதரரும் புறப்பட்டு தென்னாட்டில் இருந்த எசாயு புதல்வரை எதிர்த்துப் போர் செய்தார்கள்@ கேபுரோன் நகரையும்,அதைச் சேர்ந்த ஊர்களையும் அழித்தார்கள்@ சுற்றிலும் இருந்த அதன் சுவர்களையும் கொளுத்தினார்கள்.
66 அன்னியரின் நாட்டில் புகுவதற்குப் படையெடுத்துச் சமாரியாவுக்குச் சென்றார்கள்.
67 அக்காலத்தில், கட்டளையின்றி தங்கள் வீரத்தைக் காட்டும்படி சண்டைக்குப் போன குருக்கள் சண்டையில் மாண்டார்கள்.
68 அன்னியருடைய நாட்டில் அசோத்துஸ் நகரை யூதாஸ் அடைந்து, அதன் பீடங்களை அழித்து, பொய்த் தேவர்களுடைய சிலைகளைச் சுட்டெரித்து, நகரத்தைக் கொள்ளையடித்து யூதேயா நாடு திரும்பினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, யூதாஸ், இருந்த, அவர், நாடு, வந்து, தங்கள், கொண்டு, அவர்களை, யூதேயா, நோக்கி, போர், யூதாசும், ஏற்பாடு, தான், திமோத்தேயுஸ், நாங்கள், எல்லாரும், சொன்னார்கள், சென்று, பழைய, அவன், நகரத்தைக், கலிலேயா, பாளையம், முழுவதும், பகைவர், எல்லாரையும், ஆதலால், கலாத், நகரத்துக்கு, சுற்றிலும், ஆடவர், அன்று, நகரத்தின், திரும்பி, ஆற்றைக், மக்கபே, சகோதரன், படையை, அவர்களைப், ஓடினார்கள், கடந்து, பலர், கேள்விப்பட்ட, கலாத்தில், வலிமை, பிறகு, எதிர்த்துப், மக்கள், கண்டார், சொல்லி, ஆகமம், நாட்டில், சூசையும், விட்டார், கொள்ளையடித்து, சென்றார்கள், அசாரியாவும், காலத்திலும், இரவு, புறப்பட்டுக், இஸ்ராயேல், சகோதரரும், பிடித்து, மற்ற, வழியாய்ப், அடைந்து, கொள்ளையடித்துக், பிடித்தார்@, தோல்வி, கொளுத்தி, நகரை, நம்மைச், எதிரில், அக்கரையில், நகரம், கடந்தார், இருக்கும், சேர்ந்து, அவனை, ஏனென்றால், அடைந்த, யூதாசின், ஆற்றுக்கு, முன், எதிர்த்துச், பின்னால், சண்டை, வந்தார், பெரும், பிடித்தார், நடந்து, பேர், எல்லா, உங்கள், மூவாயிரம், எங்களை, ஒன்று, ஓடிப்போனார்கள், இவர்கள், அதைச், திரும்பினார், கூடியிருக்கிறார்கள், கோட்டையைப், ஏறக்குறைய, செய்தார்கள், கொலையுண்டார்கள், படைத்தலைவன், என்பவன், நகரையும், போர்கள், மிகவும், சூழ்ந்து, ஆன்மிகம், புனித, திருவிவிலியம், அவர்களோடு, புரிந்து, மிக்க, மக்களையும், இரையாக்கினார், அவர்களைச், வழியில், தங்களுக்கு, தோலெமாயிதா, மாண்டார்கள், அவர்களுடைய, அவர்களில், பயந்து, எண்ணாயிரம், சீமோன், மனைவி, மகிழ்ச்சியாய், மாஜெத், கார்னாயிம், போசோர், போய், மூன்று, செல்வதற்காகச், சென்றார், தாங்கள், செய்ய, கூட்டி, பெரிய, என்றும், யோனத்தாசும், போவோம், படைகளோடு, வரையிலும், மக்கட், புதல்வன், என்றார், இன்னும்