1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 6
2 அதில் செல்வம் நிறைந்த கோயிலும், கிரேசியாவில் முதன் முதல் அரசு செலுத்தின மசதோனியா மன்னனான பிலிப்பின் மகன் அலெக்சாந்தர் அங்கே விட்டுப்போன பொன்திரைகளும் கவசங்களும் கேடயங்களும் இருந்தன.
3 அரசன் வந்து நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான். ஆனால், நகரத்தின் உள்ளே இருந்தவர்களுக்கு அவன் எண்ணம் தெரிய வந்ததால் அவனால் முடியவில்லை.
4 அவர்கள் எல்லாரும் சண்டைக்குப் புறப்பட்டார்கள். அவன் அங்கிருந்து துயரத்தோடு ஓடிப் பபிலோனியா திரும்பினான்.
5 அவன் பாரசீகத்தில் இருந்த போதே யூதேயா நாட்டிலிருந்த அவன் படைகள் அழிக்கப்பட்ட செய்தி அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
6 லிசியாஸ் பெரிய படையோடு முதலில் சென்று முறியடிக்கப்பட்டானென்றும், அழிக்கப்பட்ட தன் படைகளிடமிருந்து எடுத்துக் கொண்ட போர்கருவிகளாலும் பொருட்களாலும் அவர்கள் வலிமை மிக்கவர்களானார்களென்றும்.
7 யெருசலேமில் தான் கட்டிய பீடத்தின் மேல் வைத்திருந்த வெறுப்பூட்டும் சிலைகளை அழித்து விட்டார்களென்றும், புனித இடத்தைச் சுற்றிலும் முன்போல் உயர்ந்த சுவர்கள் எழுப்பினார்களென்றும், தன் நகரமாகிய பெத்சூராவைச் சுற்றியும் அவ்விதமே செய்திருப்பதாகவும் அவன் கேள்விப் பட்டான்.
8 செய்திகளைக் கேள்விப்பட்ட அரசன் பயந்து மிகவும் நடுங்கினான். தான் நினைத்த வண்ணம் நடவாததனால், படுக்கையில் விழுந்து துயரத்தில் ஆழ்ந்தான்.
9 அவன் அவ்வாறு பலநாள் இருந்தான்@ ஏனென்றால் துயரம் மேன் மேலும் அதிகரித்ததனால், தான் சாகப்போவதாக நினைத்தான்.
10 அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து: என் கண்களினின்று தூக்கம் அகன்றது. கவலையினால் என் இதயம் தளர்ந்து பலவீனமானது.
11 என் இதயத்துள் நான் சொல்லிக் கொண்டது என்னவென்றால்: எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது துயரக்கடலில் அமிழ்ந்தினேன். முன்போ, அதிகார மிகுதியால் மகிழ்ந்திருந்தேன்.
12 யெருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன். அதில் இருந்த பொன், வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்து, யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றியே அழித்தொழிக்கும் படி படைகளை அனுப்பினேன்.
13 ஆதலால் தான் தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டனவென்று கண்டு கொண்டேன். இதோ, அன்னிய நாட்டில் துயர மிகுதியால் சாகிறேன் என்று புலம்பினான்.
14 அவன் தன் நண்பரில் ஒருவனான பிலிப்பு என்பவனை அழைத்துத் தன் நாட்டிற்கு அவனைத் தலைவனாக நியமித்து,
15 தன் மகனாகிய அந்தியோக்கஸ் என்பவனைப் பாதுகாத்துக் காப்பாற்றவும், நாட்டை அரசாளவும், தன் முடியையும் அரச ஆடையையும் மோதிரத்தையும் கொடுத்தான்.
16 அவ்விடத்திலேயே நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு அந்தியோக்கஸ் அரசன் இறந்தான்.
17 அரசன் இறந்து போனானென்றும், தான் இளமையில் வளர்த்து வந்த அவன் மகன் அந்தியோக்கஸ் என்பவனை அரசனாக நியமித்தானென்றும் லீசியாஸ் அறிந்து கொண்டான்@ அவனுக்கு எப்பாத்தோர் என்னும் பெயருமிட்டான்.
18 கோட்டையில் இருந்தவர்கள் கடவுள் ஆலயத்தைச் சுற்றி இஸ்ராயேலரை வளைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எப்போதும் தீமை விளைவித்துப் புறவினத்தாரை வலுப்படுத்த முயன்றார்கள்.
19 யூதாஸ் அவர்களை அழித்தொழிக்க எண்ணி, அவர்களைச் சுற்றிலும் முற்றுகையிட மக்கள் அனைவரையும் அழைத்தார்.
20 நூற்றைம்பதாம் ஆண்டு எல்லாரும் ஒன்று கூடி முற்றுகையிட்டு, கல் எறியும் கருவிகளையும் வேறு போர்க் கருவிகளையும் செய்தார்கள்.
21 முற்றுகைக்குள் இருந்த சிலர் வெளியே வந்து இஸ்ராயேலில் தீயவரான சிலரைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.
22 இவர்கள் அரசனிடம் சென்று: எவ்வளவு காலம் எங்களுக்கு நீதி செலுத்தாமலும் எங்கள் பகைவரைப் பழிவாங்காமலும் இருப்பீர்?
23 நாங்கள் உம்முடைய தந்தைக்குக் கீழ்ப்படியவும், அவர் கட்டளைகளின்படி நடக்கவும், அவர் தீர்மானங்களை நிறைவேற்றவும் உடன்பட்டிருந்தோம்.
24 இதனால் எங்களுடைய மக்களின் புதல்வர் எங்களை விட்டு அகன்றார்கள். எங்களில் அகப்பட்டவர்கள் எல்லாரும் கொலை செய்யப்பட்டார்கள். எங்கள் சொத்துக்களும் பறிபோயின.
25 எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நாடெங்கும் அவர்கள் தீமை செய்தார்கள்.
26 இன்று யெருசலேம் கோட்டையைத் தாக்க வருகிறார்கள்@ பெத்சூராவையும் வலுப்படுத்திக் கொண்டார்கள்.
27 நீர் விரைவில் அவர்களைத் தடுக்காவிடில், இதனினும் பெரிய காரியங்களைச் செய்வார்கள். அவர்களை அடக்குவது முடியாததாகும் எனக் கூறினார்கள்.
28 இதைக் கேட்ட அரசன் கோபம் கொண்டான்@ தன் நண்பரெல்லாரையும் படைத்தலைவர்களையும் குதிரைப்படைத் தலைவர்களையும் அழைத்தான்.
29 அன்னிய நாடுகளிலிருந்தும், கடற்கரை நகரங்களிலிருந்தும் அவன் ஆதரவிலிருந்த படைகளெல்லாம் வந்து சேர்ந்தன.
30 அவன் படையின் கணக்கு: இலட்சம் காலாட்கள்@ இருபதினாயிரம் குதிரைவீரர்@ சண்டைக்குப் பழக்கப் பட்ட முப்பத்திரண்டு யானைகள்.
31 அவர்கள் இதுமேயா வழியாகச் சென்று பெத்சூராவைச் சூழ்ந்து கொண்டு, பலநாள் போர்புரிந்து போர்க் கருவிகளைச் செய்தார்கள். உள்ளிருந்தவர்களோ வெளியே வந்து பகைவர்படைகளைத் தீக்கிரையாக்கி வீரத்தோடு போர்செய்தார்கள்.
32 யூதாஸ் கோட்டையிலிருந்து புறப்பட்டு, அரசனுடைய பாளையத்துக்கு எதிராய்ப் பேத்சக்ராவில் பாளையம் இறங்கினார்.
33 அரசன் பொழுது விடியுமுன் எழுந்து பேத்சக்கரா வழியாய்த் தன் படைகளை வேகமாய் நடத்திப் போருக்கு ஆயத்தமாக்க, அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்.
34 யானைகளைச் சண்டைக்குத் தூண்டுவதற்காக, அவர்கள் அவைகளுக்குக் கொடி முந்திரிப் பழத்தினுடையவும் கம்பளிப் பழத்தினுடையவும் சாற்றைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
35 மிருகங்களைச் சாரிசாரியாகப் பிரித்து, ஒவ்வொரு யானையோடும் இரும்புக் கவசங்களையும் செப்புத் தலைச்சீராக்களையும் அணிந்த ஆயிரம் வீரரும், ஐந்நூறு தேர்ந்தெடுத்த குதிரைவீரரும் அருகே இருந்தனர்.
36 யானைகள் போன இடமெல்லாம் இவர்களும் போனார்கள். எங்கெங்கே போயினவோ அங்கேயே தாங்களும் போய், அவற்றை விட்டுப் பிரியவில்லை.
37 ஒவ்வொரு யானையின் மீதும் அதைக் காப்பதற்கு மரத்தினால் செய்யப்பட்ட வலிமை பொருந்திய அம்பாரிகள் வைக்கப்பட்டிருந்தன@ போர்க்கருவிகளும் இருந்தன. இந்தியர் யானையை நடத்த, முப்பத்திரண்டு வீரர்கள் ஒவ்வொரு அம்பாரியின் மேல் இருந்து கொண்டு போர்செய்தார்கள்.
38 அரசன் மீதியான குதிரைப் படையை இரு பகுதிகளாகப் பிரித்து, தன் படையை எக்காளத் தொனியால் தூண்டவும், நெருங்கி அணியணியாய் இருந்த காலாட்களுக்குத் துணிவூட்டவும் செய்தான்.
39 பொன், செப்புக் கேடயங்களின் மேல் சூரிய ஒளி பட்ட போது பக்கத்து மலைகளில் ஒளி வீசி, எரிகிற விளக்குகள் போல் அவை ஒளிர்ந்தன.
40 உயர்ந்த மலைகளின் வழியாய் அரசனுடைய படையின் ஒரு பகுதி நடந்தது. மற்றொரு பகுதி சமவெளியில் நடந்தது. அவர்கள் எச்சரிக்கையாயும் வரிசை வரிசையாயும் போனார்கள்.
41 படைத்திரளின் கொக்கரிப்பினாலும், கூட்டமாக நடந்ததால் ஏற்பட்ட சத்தத்தாலும், போர்க்கருவிகள் நெருங்கி மோதினதால் உண்டான ஓசையினாலும் பூமியில் வாழ்ந்தவர்கள் நடுங்கினார்கள். ஏனென்றால், படை திரண்டதும் வலுத்ததுமாய் இருந்தது.
42 யூதாசும் தம் படையோடு போர் செய்யச் சென்றார். அரசனுடைய படையில் அறுநூறு பேர் மாண்டார்கள்.
43 சௌரா மகன் எலெயாசார், அரசனுடைய போர்க்கருவிகளால் நிறைக்கப்பட்டு, மற்ற யானைகளை விடப் பெரிதாய் இருந்த ஒரு யானையைக் கண்டு, அரசன் தான் அதன் மேல் இருக்கிறானென்று எண்ணினான்.
44 அவன் தன் மக்களைக் காப்பதற்கும், புகழ் அடைவதற்கும் தன்னைத் தானே கையளித்தான்.
45 வெகு துணிவோடு பகைவர் படையின் நடுவே ஓடி, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் தன் முன்பாக அகப்பட்டதெல்லாம் கொன்று அழித்து,
46 அந்த யானையின் கால்களின கீழ் நுழைந்து சென்று அதைக் கொன்றான். அதுவும் அவன் மேல் விழுந்தது.
47 அவனும் இறந்தான். ஆனால், யூத மக்கள் அரசனுடைய வலிமையையும், அவனது படையின் வீரத்தையும் கண்டு பின்வாங்கினார்கள்.
48 அரசனுடைய படை அவர்களுக்கு எதிராய் யெருசலேம் சென்று, யூதேயாவையும் சீயோன் மலையையும் தாக்கியது.
49 அவன் பெத்சூராவில் இருந்தவர்களோடு சமாதானம் செய்துகொண்டான். ஓய்வுநாளை முன்னிட்டு உணவுக்கு ஒன்றுமில்லாமையால் எல்லாரும் நகருக்கு வெளியே வந்தார்கள்.
50 அரசன் பெத்சூராசைப் பிடித்து அதைக் காப்பதற்குக் காவலரை நியமித்தான்.
51 தன் படையைப் புனித இடத்துக்கு நடத்தி, அங்குப் பலநாள் தங்கினான். அவ்விடத்தில் இடிக்கும் கருவிகளையும் இயந்திரங்களையும் நெருப்பு ஈட்டிகளையும் கல் எறியும் பொறிகளையும் வேல்களையும் அம்பு எய்யும் வில்லுகளையும் கவன்களையும் செய்தான்.
52 முற்றுகைக்குள் இருந்தவர்களும் அவனுக்கு எதிராய்ப் போர்க்கருவிகளைச் செய்து பலநாள் எதிர்த்துப் போராடினார்கள்.
53 ஏழாவது ஆண்டானபடியால், நகரத்தில் உணவுப் பொருட்கள் ஒன்றும் இல்லாதிருந்தது. யூதேயாவில் தங்கியிருந்தவர்கள் மீதி வைத்திருந்ததைச் செலவழித்து விட்டார்கள்.
54 புனித இடத்தைக் காக்க சில வீரர்கள் மட்டும் இருந்தார்கள். ஏனென்றால், பசியினால் வருந்தினமையால் பலர் தங்கள் இடம் போய்ச் சேர்ந்தார்கள்.
55 அந்தியோக்கஸ் அரசன் உயிரோடிருந்த போதே, அவனால் அவன் மகன் அந்தியோக்கஸ் என்பவனைக் காப்பாற்றவும், அவன் நாட்டை ஆளவும் நியமிக்கப்பட்ட பிலிப்பு என்பவன், பாரசீகம், மேதியா ஆகிய நாடுகளோடு திரும்பி வந்தான் என்றும்,
56 அரச காரியங்களைத் தானே நடத்தத் தேடுகிறான் என்றும் லிசியாஸ் கேள்விப்பட்டான்.
57 அவன் உடனே அரசனிடமும், மற்றப் படைத் தலைவர்களிடமும் போய்: நாளுக்கு நாள் நாம் வலிமை குன்றி வருகிறோம். உணவும் வெகு சொற்பமே உள்ளது. நாம் முற்றுகை போட்டிருக்கும் இடமோ அதிகப் பாதுகாப்புள்ளதாய் இருக்கிறது. நமது நாட்டின் காரியங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டி இருக்கிறது.
58 ஆதலால், இப்போது இந்த மனிதரோடு நாம் உறவுகொண்டாடி, அவர்களோடும் அவர்களைச் சேர்ந்தவர்களோடும் சமாதானம் செய்து கொள்வோம்.
59 அவர்கள் முன் போலத் தங்களுக்குரிய சடங்குகளை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டோம். அவர்களுக்கு உரிய சடங்குகளை நாம் அவமதித்ததனால் அல்லவா அவர்கள் கோபமும் மூண்டு இவைகளையெல்லாம் செய்தார்கள் என்று சொன்னான்.
60 அவன் சொன்ன வார்த்தைகளை அரசனும் பிரபுக்களும் எற்றுக் கொண்டு, யூதரோடு சமாதானம் செய்வதற்கு ஆள் அனுப்ப, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
61 மேலும், அரசனும் பிரபுக்களும் அதை உறுதிப்படுத்தி ஒப்புக்கொண்டு, கோட்டையை விட்டுப் போனார்கள்.
62 அரசன் சீயோன் மலைக்குச் சென்று, அதன் வலுத்த பாதுகாப்புகளையெல்லாம் கண்டு, தான் உறுதிப் படுத்தின சமாதானத்தை மீறிச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சுவர்களை அழிக்கும்படி கட்டளை கொடுத்து விட்டு,
63 விரைவாய் அந்தியோக்கியா நகரம் திரும்பினான்@ அவ்விடத்தில் பிலிப்பு ஆட்சி செலுத்தி வருவதைக் கண்டு, அவனோடு போர் செய்து நகரைக் கைப்பற்றினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், அரசன், சென்று, தான், அந்தியோக்கஸ், அரசனுடைய, மேல், கண்டு, இருந்த, ஏற்பாடு, எல்லாரும், புனித, செய்தார்கள், படையின், பழைய, வந்து, பலநாள், கொண்டார்கள், நாம், மகன், வெளியே, கருவிகளையும், கொண்டு, மக்கபே, ஏனென்றால், சுற்றிலும், ஆகமம், போனார்கள், ஒவ்வொரு, பிலிப்பு, இப்போது, பொன், அதைக், எங்கள், சமாதானம், செய்து, அவர்களுக்கு, அவனுக்கு, வலிமை, யெருசலேம், யானைகள், எதிராய்ப், அவர், பட்ட, முப்பத்திரண்டு, விட்டு, போர்செய்தார்கள், எங்களுக்கு, நெருங்கி, அவ்விடத்தில், சீயோன், வெகு, தானே, என்றும், இருக்கிறது, பிரபுக்களும், அரசனும், சடங்குகளை, போர், நடந்தது, விட்டுப், போய், பிரித்து, யானையின், வீரர்கள், பகுதி, செய்தான், படையை, பழத்தினுடையவும், ஆண்டு, பெரிய, லிசியாஸ், அழிக்கப்பட்ட, போதே, படையோடு, யெருசலேமில், பெத்சூராவைச், உயர்ந்த, அழித்து, சண்டைக்குப், அவனால், நாட்டில், ஆன்மிகம், திருவிவிலியம், நகரம், கேள்விப்பட்டான், நகரைக், இருந்தன, அதில், மேலும், நான், யூதாஸ், தீமை, கொண்டான்@, இறந்தான், அவர்களை, அவர்களைச், போர்க், எறியும், மக்கள், நாட்டை, காப்பாற்றவும், யூதேயாவில், மிகுதியால், எவ்வளவு, படைகளை, ஆதலால், என்பவனை, அன்னிய, சூழ்ந்து, முற்றுகைக்குள்