முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.096.சீகாழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.096.சீகாழி
2.096.சீகாழி
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2507 |
பொங்கு வெண்புரி வளரும் செங்க ணாடர வாட்டுஞ் பங்க மில்பல மறைகள் தங்கு வெண்டிரைக் கானல் |
2.096. 1 |
வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது தோல்வியுறாத வேதங்களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடையதும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும்.
2508 |
தேவர் தானவர் பரந்து நாவ தாலமிர் துண்ண ஆவ வென்றரு நஞ்ச காவ லார்மதில் சூழ்ந்த |
2.096. 2 |
தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர்தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும்.
2509 |
கரியின் மாமுக முடைய திரிய வில்பலிக் கேகுஞ் சரியின் முன்கைநன் மாதர் உரிய நாமங்க ளேத்தும் |
2.096.3 |
யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரிபவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந்தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக்கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும்.
2510 | சங்க வெண்குழைச் செவியன் அங்கம் பூணென வுடைய துங்க மாளிகை யுயர்ந்த வங்க வாண்மதி தடவு |
2.096. 4 |
சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண்மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்குவது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதிகள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும்.
2511 |
மங்கை கூறமர் மெய்யான் எங்க ளீசனென் றெழுவார் சங்கை யின்றிநன் னியமந் கங்கை நாடுயர் கீர்த்தி |
2.096. 5 |
உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும்.
2512 |
நாறு கூவிள மத்த ஏறு மேறிய ஈசன் நீறு பூசிய வுருவர் தேறு வார்கள்சென் றேத்துஞ் |
2.096. 6 |
மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தௌவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும்.
2513 |
நடம தாடிய நாதன் விடம மர்ந்தொரு காலம் இடம தாமறை பயில்வார் குடம தார்மணி மாடங் |
2.096.7 |
நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய பொதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும்.
2514 |
கார்கொண் மேனியவ் வரக்கன் ஏர்கொண் மங்கையு மஞ்ச சீர்கொள் பாதத்தொர் விரலாற் தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த |
2.096.8 |
கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும்.
2515 |
மாலு மாமல ரானும் பாலுங் காண்பரி தாய சேலும் வாளையுங் கயலுஞ் ஆலுஞ் சாலிநற் கதிர்கள் |
2.096. 9 |
திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும்.
2516 |
புத்தர் பொய்மிகு சமணர் சித்த மற்றவர்க் கிலாமைத் சித்த ரோடுநல் லமரர் முத்த னேயரு ளென்று |
2.096. 10 |
அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மனமற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறையோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து முத்தனே அருள் என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும்.
2517 | ஊழி
யானவை பலவு * * * * * * * * |
2.096. |
பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீகாழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காழிநன், மூதூர், சீகாழி, சிவபிரான், நன்னகர், சூழ்ந்த, அமைந்த, நன்னகராகும், பொருந்திய, அணிந்த, கோயில், விரும்பி, மறையவர், மான்மறி, வாழ்வதும், கூராஞ், கிளையொடு, நிற்கும், கொண்டு, புத்தர், திருமுறை, திகழும், சூழ்ந்து, உடையதுமான, சிவனுறை, திருச்சிற்றம்பலம், நகராகும், சென்று, சிவபிரானுக்கு, தண்மதி, உறையும்