முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.094.திருவாழ்கொளிபுத்தூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.094.திருவாழ்கொளிபுத்தூர்
2.094.திருவாழ்கொளிபுத்தூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
2486 |
சாகை யாயிர முடையார் ஈகை யார்கடை நோக்கி தோகை மாமயி லனைய வாகை நுண்டுளி வீசும் |
2.094. 1 |
வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர். சாமகானம் பாடுபவர். கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர். மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.
2487 |
எண்ணி லீரமு முடையா கண்ணு மாயிர முடையார் பெண்ணு மாயிர முடையார் வண்ண மாயிர முடையார் |
2.094. 2 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர். இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர். இவர் ஆயிரங்கண், கைகளை உடையவர். சக்தியின் அம்சமாகப் பலவற்றை உடையவர். பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும்.
2488 |
நொடியொ ராயிர முடையார் வடிவு மாயிர முடையார் முடியு மாயிர முடையார் வடிவு மாயிர முடையார் |
2.094. 3 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர். மிகவும் நுண்மையானவர். அவர் பார் வையும் பலவேறு வகைப்பட்டவை. பல்வேறு வண்ணங்கள் கொண்டவர். பல்வாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். பல்வேறு வடிவங்கள் கொண்டவர்.
2489 |
பஞ்சி நுண்டுகி லன்ன குஞ்சி மேகலை யுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் வஞ்சி நுண்ணிடை யுடையார் |
2.094. 4 |
வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில் ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர்.
2490 |
பரவு வாரையு முடையார் விரவு வாரையு முடையார் அரவம் பூண்பது முடையார் வரமு மாயிர முடையார் |
2.094. 5 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில் பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல அருள்பவர்.
2491 |
தண்டுந் தாளமுங் குழலுந் கொண்ட பூதமு முடையார் கண்டு கோடலு மாயார் வண்டு வாழ்பதி யுடையார் |
2.094. 6 |
கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர். பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர்.
2492 |
மான வாழ்க்கைய துடையார் தான வாழ்க்கைய துடையார் ஞான வாழ்க்கைய துடிடயார் வான வாழ்க்கையை துடையார் |
2.094. 7 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பெருமை பொருந்திய வாழ்க்கையர். தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர். அருட் கொடை வழங்கும் இயல்புடையவர். தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர். நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர்.
2493 |
ஏழு மூன்றுமொர் தலைகள் வேழ்வி செற்றதும் விரும்பி கேழல் வெண்பிறை யன்ன வாழி சாந்தமு முடையார் |
2.094. 8 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர். தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர். பலப்பல விருப்புடையவர். வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர். சாந்தம் அணிந்தவர்.
2494 |
வென்றி மாமல ரோனும் என்று மேத்துகை யுடையார் முன்றின் மாமலர் வாச மன்றி லாடல துடையார் |
2.094. 9 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள்தோறும் துதித்து வணங்கப் பெறுபவர். இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர்.
2495 | மண்டை கொண்டுழல் தேரர் குண்டர் பேசிய பேச்சுக் துண்ட வெண்பிறை சூடிச் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த |
2.094. 10 |
மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக.
2496 | நலங்கொள்
பூம்பொழிற் காழி வலங்கொள் வெண்மழு வாளன் இலங்கு வெண்பிறை யானை நலங்கொள் சிந்தைய ராகி |
2.094. 11 |
நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாழ்கொளிபுத்தூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முடையார், வாழ்கொளி, வாழ்கொளிபுத்தூர், புத்தூ, ருளாரே, இறைவர், உடையவர், கொண்டவர், துடையார், யுடையார், வாழும், சூழ்ந்த, வெண்பிறை, விரும்பி, வாழ்க்கைய, வாரையு, பல்வேறு, வுடையார், இமையவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, நலங்கொள், நன்னெறி, நற்றமிழ், பொழில், பலவற்றை, உமையம்மையை, நுண்ணிய, ஆயிரம், தம்மோடு, வண்டுகள், அருள்பவர், திருவாழ்கொளிபுத்தூர்