முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.098.திருத்துருத்தி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.098.திருத்துருத்தி
2.098.திருத்துருத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்.
தேவியார் - முகிழாம்பிகையம்மை.
2528 |
வரைத்தலைப் பசும்பொனோ திரைத்தலைச் சுமந்துகொண் கரைத்தலைத் துருத்திபுக் உரைத்தலைப் பொலிந்துனக் |
2.098. 1 |
மலைகளிலிருந்து பொன்னையும், அரிய அணிகளையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரையிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே! சொன்னவாற றிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ?
2529 |
அடுத்தடுத்த கத்தியோடு தொடுத்துடன் சடைப்பெய்தாய் கடுத்தடிப் புறத்தினா எடுத்தெடுத் துரைக்குமாறு |
2.098. 2 |
சடையில் அகத்திப்பூ, வன்னி, வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே! திருத்துருத்தியில் எழுந்தருளியவனே! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம்.
2530 |
கங்குல்கொண்ட திங்களோடு சங்கிலங்கு வெண்குழை பொங்கிலங்கு பூணநூ கெங்குநின் னிடங்களா |
2.098. 3 |
கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும், சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும், பொங்கி விளங்கும் பூணநூலையும் உடைய உருத்திரமூர்த்தியே! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க, திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ?
2531 |
கருத்தினாலொர் காணியில் அருத்தியாற்றம் மல்லல்சொல்லி ஒருத்திபால் பொருத்திவைத் இருத்திநீ துருத்திபுக் |
2.098.4 |
கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை. தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி, ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ?
2532 |
துறக்குமா சொலப்படாய் மறக்குமா றிலாதவென்னை பிறக்குமாறு காட்டினாய் டிறக்குமாறு காட்டினாய்க் |
2.098. 5 |
திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல்வாயாக.
2533 |
வெயிற்கெதிர்ந் திடங்கொடா துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மயிற்கெதிர்ந் தணங்குசாயன் வெயிற்கெதிர்ந் தொரம்பினால் |
2.098. 6 |
வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவை இனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ!
2534 |
கணிச்சியம் படைச்செல்வா துணிச்சிரக் கிரந்தையாய் அணிப்படுந் தனிப்பிறைப் மணிப்படும்பை நாகநீ |
2.098. 7 |
மழுப்படையினை உடைய செல்வரே! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர்களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே! கரந்தை சூடியவரே, திருத்துருத்தியில் உறைபவரே! அழகியதும் ஒப்பற்றதுமான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும், நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர்.
2535 |
சுடப்பொடிந் துடம்பிழந் இடர்ப்படக் கடந்திடந் கடற்படை யுடையவக் அடற்பட வடுக்கலில் |
2.098. 8 |
நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோநீர்.
2536 |
களங்குளிர்ந் திலங்குபோது வளங்கிளம்பொ னங்கழல் துளங்கிளம்பி றைச்செனித் உளங்குளிர்ந்த போதெலா |
2.098.9 |
தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர். ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன்.
2537 |
புத்தர்தத் துவமிலாச் உத்தம மெனக்கொளா துத்தநின்று பண்செயுஞ் பித்தர்பித்த னைத்தொழப் |
2.098. 10 |
புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது, வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும்.
2538 |
கற்றுமுற்றி னார்தொழுங் சுற்றுமுற்று மாயினா பெற்றமொன் றுயர்த்தவன் குற்றமுற்று மின்மையிற் |
2.098. 11 |
கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்துருத்தி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருத்துருத்தியில், திருத்துருத்தி, துருத்தியாய், விளங்கும், குளிர்ந்த, எழுந்தருளிய, துருத்திபுக், இறைவனே, வெயிற்கெதிர்ந், பைம்பொழில், லல்லையே, பிறப்பறுத்தல், மன்மதன், தலைமையாளர், செய்யும், எதிர்த்து, யோகியாய், உனக்கு, காவிரிக், திருச்சிற்றம்பலம், திருமுறை, காரணம், எடுத்து, விடுத்து, வெண்குழை, திங்களோடு, திருந்தடி