முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.095.திருஅரைசிலி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.095.திருஅரைசிலி
2.095.திருஅரைசிலி
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரைசிலிநாதர்.
தேவியார் - பெரியம்மை.
2497 | பாடல்
வண்டறை கொன்றை கோடல் கூவிள மாலை வாடல் வெண்டலை மாலை ஆடன் மாசுண மசைத்த |
2.095. 1 |
செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.
2498 |
ஏறு பேணிய தேறி வேறு செய்தத னுரிவை ஊறு தேனவ னும்பர்க் ஆறு சேர்தரு சென்னி |
2.095. 2 |
விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்குபவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.
2499 |
கங்கை நீர்சடை மேலே கொங்கை யாளொரு பாகம் சங்கை யாய்த்திரி யாமே அங்கை யாலன லேந்து |
2.095.3 |
வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் முல்லை நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
2500 |
மிக்க காலனை வீட்டி புக்க வூரிடு பிச்சை தக்க நூல்திகழ் மார்பில் அக்கி னாரமும் பூண்ட |
2.095.4 |
அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துக் காமன் உடல் நீறாகும்படி விழித்து ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமையோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிய வரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
2501 | மானஞ் சும்மட நோக்கி தானஞ் சாவரண் மூன்றுந் வானஞ் சும்பெரு விடத்தை ஆனஞ் சாடிய சென்னி |
2.095.5 |
மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வானவரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.
2502 |
பரிய மாசுணங் கயிறாப் பெரிய வேலையைக் கலங்கப் கரிய நஞ்சது தோன்றக் அரிய வாரமு தாக்கும் |
2.095.6 |
அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
2503 |
வண்ண மால்வரை தன்னை கண்ணுந் தோளுநல் வாயும் பண்ணின் பாடல்கைந் நரம்பாற் அண்ண லாயருள் செய்த |
2.095.8 |
அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.
2504 |
குறிய மாணுரு வாகிக் வெறிகொள் தாமரை மேலே செறிவொ ணாவகை யெங்குந் அறிவொ ணாவுரு வத்தெம் |
2.095.9 |
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
2505 |
குருளை யெய்திய மடவார் திரளை கையிலுண் பவருந் பொருளைப் பொய்யிலி மெய்யெம் அருளை யார்தர நல்கும் |
2.095.10 |
இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடிவாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டைகளைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாதவரும் உண்மையின் வடிவானரும், தம் பொன்னடிகளை வணங்குவார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள்.
2506 | அல்லி
நீள்வயல் சூழ்ந்த நல்ல ஞானசம் பந்தன் சொல்ல வல்லவர் தம்மைச் வல்ல வானுல கெய்தி |
2.095. 11 |
நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅரைசிலி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடிகளுக், சிலியே, அரசிலியேயாகும், சிவபிரானுக்கு, கொன்றை, அடிகளுக்கு, விரும்பிய, செய்து, திருஅரசிலியேயாகும், அஞ்சும், வானவர், என்னும், சூழ்ந்த, மார்பில், அரசிலி, தோன்றக், பொருந்திய, வெண்டலை, திருச்சிற்றம்பலம், திருமுறை, வெண்புலால், சென்னி, கொண்டு, திருஅரைசிலி, இளமையும், கையில்