முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 54. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 54. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலினால் உண்டாகும் ஏதத்தையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் வரைந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)
யானே யீண்டை யேனே யென்னலனே ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. |
5 |
- மீனெறிதூண்டிலார். |
முடிபு: யான் ஈண்டையேன்; என் நலன் நாடனொடு ஆண்டு ஒழிந்தன்று.
கருத்து: தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 54. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, தலைவி, கூற்று, நலன், யான், யானை, சங்க, எட்டுத்தொகை, பெண்மை