முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 52. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 52. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதையும் அதனைத் தமர் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை யறிந்த யான் உண்மையைத் தாயர்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. |
5 |
- பனம்பாரனார் |
முடிபு: மடந்தையே, நீ நடுங்கல் கண்டு யான் பரிந்தனென் அல்லனோ?
கருத்து: நின் துயர் கண்டு ஆற்றாமல் யான் அறத்தொடு நின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 52. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், யான், தோழி, கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, மடந்தையே, நின், கண்டு, விளங்கும், நடுங்கல், எட்டுத்தொகை, சங்க, பரிந்தனென், அல்லனோ