முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 55. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 55. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அணிமையில் நின்ற காலத்தில், அவன் விரைந்து வரைந்துகொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்து வாளாய், “இவ்வூர் சிலநாளே வாழ்வதற்குரியதாகவும், இன்னாமையை யுடையதாகவும் இருக்கின்றது” என்று கூறி, வரையாவிடின் தலைவி உயிர்நீப்பாளென்று தோழி புலப்படுத்தியது.)
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட் டாகும் சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. |
5 |
- நெய்தற் கார்க்கியர். |
முடிபு: இச் சிறுநல்லூர் சின்னாட்டு.
கருத்து: தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 55. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவி, அவன், வந்த, சங்க, எட்டுத்தொகை, தலைவன்