முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 250. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 250. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்று வினைமுற்றி மீண்டு வரும் பொழுது தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, "இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்துவாயாக" என்றது.)
பரலவல் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா னெறிமுத லுகளும் மாலை வாரா வளவைக் காலியற் கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப் பொருகயன் முரணிய உண்கண் |
5 |
தெரிதீங் கிளவி தெருமர லுயவே. | |
- நாமலார் மகனார் இளங்கண்ணனார். |
முடிபு: பாக, மாலை வாரா அளவை, கிளவி உய மாக்கடவுமதி.
கருத்து: மாலை வருவதற்கு முன் தலைவி இருக்கும் இடத்திற்குத்தேரைச் செலுத்துவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 248 | 249 | 250 | 251 | 252 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 250. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், மாலை, தலைவன், கூற்று, செலுத்துவாயாக, உடைய, பாலை, தலைவி, குறுந்தொகை, வருவதற்கு, கிளவி, வாரா, இருக்கும், எட்டுத்தொகை, சங்க