முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 249. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 249. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரியும் காலத்தில், தன்னை நோக்கி, "நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?" என்ற தோழிக்கு, "அவர் மலையைக் கண்டு ஆற்றுவேன்" என்பது படத் தலைவி கூறியது.)
இனமயில் அகவு மரம்பயில் கானத்து நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப் படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக் குன்ற நோக்கினென் தோழி பண்டை யற்றோ கண்டிசின் நுதலே. |
5 |
- கபிலர். |
முடிபு: தோழி, அவர் நாட்டுக் குன்றம் தோக்கினென்; நுதல் பண்டையற்றோ? கண்டிசின்.
கருத்து: தலைவருடைய குன்றத்தை நோக்கி ஆற்றி இருப்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 247 | 248 | 249 | 250 | 251 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 249. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, உடைய, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, கூற்று, கண்டிசின், குன்றத்தை, உள்ள, நோக்கி, எட்டுத்தொகை, சங்க, அவர், பொழிந்த, நாட்டுக்