முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 248. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 248. நெய்தல் - தோழி கூற்று
(வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, "வெறியாட்டு அயர்ந்து தாய் தலைவனை அறிந்து, வரைவுக்கு உரியவற்றைச் செய்கின்றாளாதலின் வரைவுண்டாதல் ஒருதலை; அதற்குரிய நாளும் அணிமையில் உள்ளது; ஆதலின் நீ ஆற்றா யாதல் நன்றன்று" என்று தோழி கூறியது.)
அதுவர லன்மையோ அரிதே அவன்மார் புறுக வென்ற நாளே குறுகி ஈங்கா கின்றே தோழி கானல் ஆடரை புதையக் கோடை யிட்ட அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக் |
5 |
குறிய வாகுந் துறைவனைப் பெரிய கூறி யாயறிந் தனளே. |
|
- உலோச்சனார். |
முடிபு: தோழி, துறைவனை யாய் கூறி அறிந்தனள்; அது வரலன்மைஅரிது; குறுகி ஈங்காகின்று.
கருத்து: வரைவு அணிமையில் நிகழ்வதாதலின் நீ ஆற்றாது இருத்தல் நன்றன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 246 | 247 | 248 | 249 | 250 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 248. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வரைவு, குறுந்தொகை, கூற்று, நெய்தல், குறுகி, நன்றன்று, கூறி, நாள், ஆதலின், தாய், எட்டுத்தொகை, சங்க, தலைவனை, அறிந்து, அணிமையில்