முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 228. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியைநோக்கி, “நீஇதுகாறும் நன்றாக ஆற்றி இருந்தாய்!” என்று தோழி கூறிய பொழுது,“தலைவர் என் நெஞ்சிற்கு அணியராய் இருந்ததனாலும் அவர் நாட்டுத்திரை நம்மூர்க்கு வந்து பெயர்ந்ததனாலும் ஆற்றி இருந்தேன்” என்றுதலைவி கூறியது.)
வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரைவந்து பெயரும் என்பநத் துறந்து நெடுஞ்சே ணாட்டார் ஆயினும் |
5 |
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. | |
- செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார். |
முடிபு:சிறுகுடி முன்றிலில் திரை வந்து அணியரது தண்கடனாட்டுப் பெயரும்.
கருத்து:தலைவன் என் நெஞ்சில் இருந்தமையின் ஆற்றி இருந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 226 | 227 | 228 | 229 | 230 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், ஆற்றி, வந்து, தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, சிறுகுடி, பெயரும், தோழி, எட்டுத்தொகை, சங்க, நெஞ்சிற்கு