முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 230. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 230. நெய்தல் - தோழி கூற்று
(தலைவனது குறையைக் கேட்ட தோழி தலைவிபால், “நெடுநாட்களாக நினது உடம்பாட்டை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்த தலைவன் யான் சேட்படுத்தியமையின் சில காலமாக வாரா தொழிந்தான்” என்று இரக்கம் வரும்படி கூறியது.)
அம்ம வாழி தோழி கொண்கன் தானது துணிகுவ னல்லன் யானென் பேதை மையாற் பெருந்தகை கெழுமி நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ வயச்சுறா வழங்குநீர் அத்தம் |
5 |
சின்னாள் அன்ன வரவறி யானே. | |
- அறிவுடை நம்பியார். |
முடிபு: தோழி-, கொண்கன் வரவறியான்; தான் துணிகுவன் அல்லன்;யான் கெழுமிச் செய்தது உடையேன்கொல்.
கருத்து: நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான்கொல்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 228 | 229 | 230 | 231 | 232 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 230. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், நெய்தல், கூற்று, யான், தலைவன், குறுந்தொகை, கொண்கன், உடைய, அல்லன், வந்து, எட்டுத்தொகை, சங்க, கொண்டிருந்த