முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 229. பாலை - கண்டோர் கூற்று
குறுந்தொகை - 229. பாலை - கண்டோர் கூற்று
(தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போன வழிஅவரைக் கண்டார், “இவர்கள் இளமையில் ஒருவரோடு ஒருவர் கலாம்விளைத்திருந்தனர். இப்பொழுதோ இணை பிரியாத துணைவர் ஆயினர்.ஊழின் வலிதான் என்னே!” எனத் தம்முள் கூறியது.)
இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் |
5 |
துணைமலர்ப் பிணைய லன்னவிவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே. |
|
- மோதாசானார். |
முடிபு: செரு உறுப; பாலே, மணமகிழியற்கை காட்டியோய்;நல்லை மன்ற.
கருத்து: ஊழ்வினையின் வலியால் இவர்கள் தலைவனும்தலைவியும் ஆயினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 227 | 228 | 229 | 230 | 231 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 229. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கண்டோர், கூற்று, பாலே, இவர்கள், எட்டுத்தொகை, சங்க, ஆயினர்