முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 198. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 198. குறிஞ்சி - தோழி கூற்று
(“இனி யாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ ஆண்டேவருக. ஈண்டு எம்முடைய தாய் வருவாளாதலின் வாரற்க” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் படுகிளி கடிகஞ் சேறும் அடுபோர் |
5 |
எகுவிளங்கு தடக்கை மலையன் கானத் தார நாறு மார்பினை வாரற்க தில்ல வருகுவள் யாயே. |
|
- கபிலர். |
முடிபு: இயவில் சேறும்; யாய் வருகுவள்; வாரற்க.
கருத்து: இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடுஅளவளாவுவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 196 | 197 | 198 | 199 | 200 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 198. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, வாரற்க, வருகுவள், சேறும், பசிய, தடக்கை, சங்க, தாய், எட்டுத்தொகை