முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 200. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 200. முல்லை - தலைவி கூற்று
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந் திழிதரும் புனலும் வாரார் தோழி மறந்தோர் மன்ற மறவா நாமே கால மாரி மாலை மாமழை |
5 |
இன்னிசை யுருமின முரலும் முன்வரல் ஏமம் செய்தகன் றோரே. |
|
- அவ்வையார். |
முடிபு: தோழி, மழை முரலும்; புனலும் இழிதரும்; அகன்றோர்வாரார்; மறந்தோர் மன்ற; நாம் மறவாம்.
கருத்து: கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 198 | 199 | 200 | 201 | 202 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 200. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தலைவர், மறந்தோர், மன்ற, முரலும், நாம், அவர், எட்டுத்தொகை, சங்க, நம்மை, மறந்தார், புனலும்