தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 பின்பு, மாநிலத் தலைவர்களையும் அதிகாரிகளையும் ஆளுநர்களையும் ஆலோசனைக் குழுவினர்களையும் நிதிப்பொறுப்பாளர்களையும் நீதிபதிகளையும் குற்ற விசாரணைக்காரர்களையும், மாநிலங்களின் மற்றெல்லா அலுவலர்களையும் நபுக்கோதனசார் அரசன் தான் நிறுத்திய படிமத்தின் பிரதிட்டைக்கு வரும்படி கட்டளை அனுப்பினான்.
3 அவ்வாறே மாநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் ஆளுநர்களும் ஆலோசனைக் குழுவினர்களும் நிதிப் பொறுப்பாளர்களும் நீதிபதிகளும் குற்ற விசாரணைக்காரர்களும், மாநிலங்களின் மற்றறெல்லா அலுவலர்களும் மன்னன் நபுக்கோதனசார் நாட்டிய படிமத்தின் பிரதிட்டைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்@ நபுக்கோதனசார் நிறுத்திய சிலையின் முன்னால் நின்றார்கள்.
4 கட்டியக்காரன் உரத்த சத்தமாய்க் கூவி, "இதனால் மக்களனைவருக்கும், எல்லா இனத்தவர்க்கும் மொழியினர்க்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்:
5 எக்காளம், நாகசுரம், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியிலே, நீங்கள் தாழ விழுந்து, நபுக்கோதனசார் அரசன் நிறுத்திய பொற்சிலையைப் பணிதல் வேண்டும்.
6 எவனாகிலும் தாழ விழுந்து பணியவில்லையெனில் அவன் அந்நேரமே தீச்சூளையில் போடப்படுவான்" என்றான்.
7 ஆகையால், எக்காளம், நாசுகரம் கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடனே, எல்லா மொழியினரும் தாழ விழுந்து மன்னன் நபுக்கோதனசார் நிறுத்திய சிலையைப் பணிந்து தொழுதார்கள்.
8 உடனே, அப்பொழுது கல்தேயர் சிலர் அணுகி வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள்.
9 மன்னன் நபுக்கோதனசாரிடம் அவர்கள் கூறினர்: "அரசே, நீர் நீடுழி வாழ்க!
10 அரசே, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழ விழுந்து பொற்சிலையைப் பணிய வேண்டும் என்றொரு கட்டளை பிறப்பித்தீர்@
11 எவனாகிலும் தாழ விழுந்து பணியாமற் போனால் அவன் எரிகிற தீச்சூளையில் போடப்படுவான் என்றும் நீர் ஆணை விடுத்தீர்.
12 ஆனால் அரசே, பபிலோன் மாநிலத்தின் காரியங்களைக் கண்காணிக்கும்படி நீர் ஏற்படுத்திய சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்னும் யூதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் உமது கட்டளையை அவமதித்து, உம் தெய்வங்களை வணங்காமல், நீர் நாட்டி வைத்த பொற்சிலையைப் பணியாமலிருக்கிறார்கள்."
13 அப்போது நபுக்கோதனசார் கடுஞ்சினங் கொண்டு, சித்ராக்கையும் மிசாக்கையும் அப்தேநாகோவையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்@ உடனே அவர்கள் அரசன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர்.
14 நபுக்கோதனசார் அவர்களை நோக்கி, "சித்ராக், மிசாக், அப்தேநாகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்காமலும், நான் நாட்டிய பொற்சிலையைப் பணியாமலும் இருந்தது உண்மை தானா?
15 இப்போதாவது, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் போது, நீங்கள் தாழவிழுந்து நான் செய்த சிலையைப் பணியத் தயாராயிருக்கிறீர்களா? பணியா விட்டால் அந்த நொடியிலே எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள்@ உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய கடவுள் யார் இருக்கிறார்?" என்றான்.
16 அதற்குச் சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் மன்னன் நபுக்கோதனசாரை நோக்கி, "இதைப்பற்றி உமக்கு மறுமொழி சொல்ல எங்களுக்குக் கடமையில்லை.
17 ஏனெனில், அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகிற தீச்சூளையினின்றும் உம் கைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி மீட்க வல்லவர்.
18 அப்படியே அவருக்கு மனமில்லாமற்போயினும் உம்முடைய தெய்வங்களுக்குப் பணிபுரியோம், நீர் நாட்டிய பொற்சிலையைப் பணிய மாட்டோம்@ இதெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கட்டும், அரசே" என்றார்கள்.
19 அப்போது மன்னன் நபுக்கோதனசாருக்கு கடுஞ்சின மூண்டது@ கடுகடுப்பான முகத்தோடு சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களைப் பார்த்தான்@ சாதாரணமாய்ச் சூடாக்குவதை விடத் தீச்சூளையை ஏழு மடங்கு மிகுதியாய்ச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
20 பின்பு சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களின் கால்களைக் கட்டி, அவர்களை அந்த எரிகிற சூளையில் போடும்படி தன் படைவீரர்களுள் மிகுந்த உடல் வலிமையுள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.
21 உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேற்போர்வையோடும் தலைப்பாகையோடும் மிதியடிகளோடும் ஆடைகளோடும் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டி எரிகிற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்.
22 ஏனெனில் அரசனின் கட்டளையை உடனடியாய் நிறைவேற்ற வேண்டியிருந்தது@ தீச்சூளையோ மிக வெப்பமாய் இருந்தது@ ஆகையால் சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரைத் தீச்சூளையில் எரிவதற்குத் தூக்கிச் சென்றவர்களை அந்தத் தீப்பிழம்பு சுட்டெரித்துச் சாகடித்தது.
23 சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்.
24 தீச்சூளையின் நடுவில் அசாரியாஸ் பாடிய பாடல்: ஆனால் அவர்கள் கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டும், ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டும் தீச்சூளையின் நடுவில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.
25 அப்போது அசாரியாஸ் எழுந்து நின்று நெருப்பின் நடுவில் வாய் விட்டு வேண்டிக் கொண்டார்@ அவர் சொல்லிய செபம் இதுவே:
26 எங்கள் தந்தையரின் இறைவனாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக! உமது திருப்பெயர் என்றென்றும் புகழப்படுக! அதற்கு மகிமை உண்டாகுக!
27 ஏனெனில், நீர் எங்களுக்குச் செய்தவற்றிலெல்லாம் நீதியுள்ளவராய் இருக்கிறீர்@ உம் செயல்கள் அனைத்தும் மெய்யானவை, உம் நெறிமுறைகள் நேர்மையானவை@ உம் தீர்மானங்கள் உண்மையுள்ளவை.
28 எங்கள் மேலும் எங்கள் தந்தையரின் திருநகரமாகிய யெருசலேமின் மேலும் நீர் வரச்செய்த அனைத்திலும் உம்முடைய தீர்ப்புகள் உண்மையானவை@ ஏனெனில் எங்கள் பாவங்களை முன்னிட்டே நீர் உண்மையோடும் நீதியோடும் எங்கள்மேல் அவற்றையெல்லாம் வரச்செய்தீர்.
29 ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம். உம்மை விட்டகன்று நீதிக்கொவ்வாமல் நடந்தோம், எல்லாவற்றிலும் துரோகம் செய்தோம்.
30 நாங்கள் உம் கட்டளைகளுக்குச் செவி சாய்க்கவில்லை, அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை@ நாங்கள் நன்றாய் இருக்கும்படி நீர் கட்டளையிட்டவற்றை நாங்கள் செய்யவுமில்லை.
31 ஆகையால் நீர் எங்களுக்கு அனுப்பினவை யாவும், எங்களுக்கு நீர் செய்தவை அனைத்துமே நீதி நியாயத்தின்படியே நீர் செய்திருக்கிறீர்.
32 அக்கிரமிகளும் கொடியவர்களும் அநீதர்களுமான எங்கள் எதிரிகள் கையில் எங்களை விட்டு விட்டீர்@ உலகிலேயே மிகக் கொடியவனான அநீத அரசனிடம் நீர் எங்களைக் கையளித்து விட்டீர்.
33 ஆனால் இப்பொழுதோ நாங்கள் வாய் திறக்கவும் இயலாது@ உம் அடியார்களும், உம்மைப் பணிகிறவர்களும் நகைப்புக்கும் வெட்கத்திற்கும் உள்ளானார்கள்.
34 உம் திருப்பெயரை முன்னிட்டு என்றென்றைக்கும் எங்களைக் கைவிட்டு விடாதீர்@ உமது உடன்படிக்கை வீணாய்ப் போக விடாதீர்.
35 உம்முடைய அன்பர் ஆபிரகாமைப் பற்றியும், உம் ஊழியர் ஈசாக் என்பவரைப் பற்றியும், உம்முடைய பரிசுத்தனாகிய இஸ்ராயேலைப் பற்றியும் எங்களை விட்டு உம் இரக்கத்தை நீக்காதீர்.
36 ஏனெனில், நீர் அவர்களுடைய வித்தினை வானத்து விண்மீன்கள் போலும், கடலோரத்து மணலைப் போலும் பெருகப் பண்ணுவதாக வாக்குறுதி செய்தீரே!
37 ஆண்டவரே, நாங்கள் மற்றெந்த இனத்தாரையும் விட எண்ணிக்கையில் குறைந்து போனோம்@ எங்கள் பாவங்களின் காரணத்தால் இன்று இவ்வுலகிலேயே மிகவும் தாழ்வடைந்து விட்டோம்.
38 இப்பொழுதோ எங்களுக்கு அரசனில்லை, இறைவாக்கினரோ தலைவரோ யாருமில்லை@ தகனப்பலியில்லை, எவ்வகைப் பலியுமில்லை@ காணிக்கையோ தூபமோ கிடையாது@ உமது முன்னிலையில் முதற் கனிகளைப் படைக்கவோ, உமது இரக்கத்தைப் பெறவோ இடமே கிடையாது.
39 ஆயினும் வருந்துகின்ற உள்ளத்தோடும், தாழ்மையான சிந்தையோடும் உள்ள எங்களை ஏற்றருளும்@
40 செம்மறிக் கடாக்களையும் எருதுகளையும் முற்றிலும் எரித்துச் செலுத்தப்படும் தகனப் பலியைப் போலவும், பல்லாயிரம் கொழுத்த செம்மறிப்புருவைகளின் பலியைப் போலவும் எங்களுடைய பலி உமக்கு உகந்ததாய் இருக்கும்படி இன்றைக்கு உம் முன்னிலையில் எழும்புவதாக! ஏனெனில் உம்மை நம்பினோர்க்குக் கலக்கமில்லை.
41 இப்பொழுது நாங்கள் உம்மை முழு உள்ளத்தோடு பின்பற்றுகிறோம், உமக்கு அஞ்சி, உமது முகத்தை நாடுகிறோம்.
42 எங்களை அவமானத்துக்கும் உள்ளாக்காதீர், உமது பரிவுக்கேற்பவும், இரக்கப் பெருக்கத்தின்படியும் எங்களை நடத்தியருளும்.
43 ஆண்டவேர, உம் வியத்தகு செயல்களால் எங்களை மீட்டு உமது திருப்பெயருக்கு மகிமை தேடித் தந்தருளும்.
44 உம் அடியார்களுக்குத் துன்பம் கொடுக்கும் அனைவரும் அவமானத்திற்கு ஆளாவார்களாக! அவர்கள் ஆற்றில் எல்லாம் இழந்து தாழ்த்தப்படுவார்களாக! அவர்களது வல்லமையும் நொறுக்கப்படுவதாக!
45 நீர் ஒருவரே இறைவானாகிய ஆண்டவரென்பதையும், இவ்வுலகம் முழுவதிலும் மகிமையுள்ளவர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்களாக!"
46 இது இவ்வாறிருக்க, அவர்களைத் தீச்சூளையில் போட்டவர்களான அரசனுடைய ஊழியர்கள் சூளையின் மணலில் நிலக்கீல், குங்கிலியம், சணற்கூளம், விறகுச் சுள்ளிகள் ஆகியவற்றை ஓயாமல் இட்டு தீ வளர்த்துக் கொண்டே இருந்தார்கள்.
47 தீயானது சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று@
48 அது வெளியிலும் தாவிச் சூளையின் அருகில் நின்றிருந்த கல்தேயர்களைப் பொசுக்கி விட்டது.
49 ஆண்டவருடைய தூதரோ அசாரியாசோடும், அவருடைய தோழர்களோடும் சூளைக்குள் இறங்கி, தீக்கொழுந்தைச் சூளையினின்றும் வெளியே செல்லச் செய்தார்@
50 மேலும் சூளையின் நடுவில் குளிர்ந்த காற்று வீசும்படி செய்தார்@ ஆகவே நெருப்பு அவர்களைத் தொடவே இல்லை@ அவர்கள் கொஞ்சமும் வருத்தமோ துன்பமோ அடையவில்லை.
51 இளைஞர் மூவரின் பாடல்: அப்பொழுது அந்த மூவரும் ஒரு வாய்ப்பட அந்தச் சூளையிலேயே கடவுளைப் போற்றி வாழ்த்திப் புகழ்ந்தனர்@ அவர்கள் பாடிய புகழ்ப்பண் இதுவே:
52 எங்கள் தந்தையரின் இறைவனாகிய ஆண்டவரே, நீர் புகழ் பெறுவீராக! என்றென்றும் நீர் போற்றப்படவும், உயர்த்தப்படவும் தகுதியுள்ளவர். உமது மகிமையுள்ள திருப்பெயர் புகழப்படுவதாக! என்றென்றும் போற்றப்படவும் உயர்த்தப்படவும் கடவதாக!
53 உமது மகிமையுள்ள பரிசுத்த கோயிலில் நீர் புகழப்படுவீராக! என்றென்றும், எல்லாருக்கும் மேலாக வாழ்த்தும் மகிமையும் பெறுவீராக!
54 உமது அரசின் அரியணையில்மேல் நீர் புகழப்படுவீராக! என்றென்றும் வாழ்த்தும் உயர்ச்சியும் பெறுவீராக!
55 கெருபீம்கள் மேல் அமர்ந்து பாதாளத்தைக் காண்கிறவரே, நீர் புகழப்படுவீராக! என்றென்றும் போற்றுதலும் உயர்ச்சியும் பெறுவீராக!
56 வானகத்திலே நீர் புகழப்படுவீராக! என்றென்றும் வாழ்த்தும் மகிமையும் பெறுவீராக!
57 ஆண்டவருடைய எல்லாப் படைப்புகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
58 ஆண்டவருடைய தூதர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
59 வான மண்டலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
60 வான மண்டலத்திற்கும் மேலிருக்கும் நீர் நிலைகளே, நீங்கள் அனைவரும்
61 ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்: ஆண்டவருடைய வல்லமைகளே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
62 கதிரவனே, நிலவே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
63 விண்மீன்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
64 மழையே, பனியே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
65 காற்றுகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
66 தீயே, வெப்பமே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
67 குளிரே, வெயிலே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
68 பனித்திவலைகளே, மூடுபனியே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
69 உறைபனியே, குளிரே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
70 பனிமலையே, பனிக்கட்டிகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
71 இரவே, பகலே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
72 ஒளியே, இருளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
73 மின்னல்களே, மேகங்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
74 நிலவுலகம் ஆண்டவரைப் புகழ்வதாக! என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துவதாக!
75 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
76 தரையில் தளிர்ப்பவையே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
77 நீரூற்றுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
78 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
79 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
80 வானத்துப் பறவைகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும்
81 அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்: மிருகங்களே, ஆடுமாடுகளே, அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
82 மணமக்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
83 இஸ்ராயேல் ஆண்டவரைப் புகழ்வதாக! என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துவதாக!
84 ஆண்டவரின் அர்ச்சகர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
85 ஆண்டவரின் ஊழியர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
86 நீதிமான்களின் உள்ளங்களே, ஆன்மாக்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
87 இதயத்தில் தூய்மையும் தாழ்ச்சியும் உள்ளவர்களே, ஆண்டவரைப் புகழுங்கள், என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள்.
88 அனானியாசே, அசாரியாசே, மிசாயேலே, ஆண்டவரைப் புகழுங்கள். என்றென்றும் அவரை வாழ்த்தி உயர்த்துங்கள். ஏனெனில் அவர் நம்மைப் பாதாளத்தினின்று மீட்டார், சாவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்தார்@ கொழுந்து விட்டெரியும் தீச் சூளையின் வெந்தணலிலிருந்து நம்மை மீட்டு, நெருப்பின் நடுவிலிருந்து காத்தார்.
89 ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள், ஏனெனில் அவர் நல்லவர், அவருடைய இரக்கம் என்றென்றும் நீடிக்கிறது.
90 இறையடியார்களே, தேவர்க்கெல்லாம் இறைவனான ஆண்டவரைப் புகழுங்கள், அவரை வாழ்த்திப் போற்றுங்கள், ஏனெனில் அவருடைய இரக்கம் என்றென்றும் நீடிக்கிறது."
91 அரசன் புதுமையை ஏற்றுக் கொள்ளுகிறான்: அப்போது மன்னன் நபுக்கோதனசார் வியப்புற்று விரைந்தெழுந்தான்@ தன் அமைச்சர்களை நோக்கி, "மூன்று மனிதர்களையல்லவா கட்டி நெருப்பின் நடுவில் எறிந்தோம்?" என்று வினவினான்@ அதற்கு அவர்கள், "ஆம், அரசே" என்று விடை தந்தனர்.
92 அதற்கு அவன், "கட்டவிழ்க்கப் பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் இதோ, நான்கு பேர் உலாவுகிறதை நான் காண்கிறேனே! அவர்களுக்கோ ஒருவகைத் துன்பமும் நேரவில்லை@ மேலும் நான்காம் பேர்வழியின் சாயல் உம்பருலகத்தார் சாயல் போல் இருக்கிறதே!" என்றான்.
93 அப்போது நபுக்கோதனசார் எரிகிற தீச்சூளையின் வாயிலண்டை வந்து, "உன்னத கடவுளின் ஊழியர்களாகிய சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரே, வெளியே வாருங்கள்" என்றான். உடனே சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்கள் தீயின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
94 மாநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் ஆளுநர்களும், அரசனின்
95 ஆலோசனைக்காரர்களும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீயே படாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய மேற்போர்வை தீயாமலும், அவர்களிடத்தில் நெருப்பின் புகை நாற்றம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்: அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.
96 ஆதலால், சித்ராக், மிசாக், அப்தேநாகோ இவர்களின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறுகிற எந்த மக்கள் குலத்தவனும் எந்த இனத்தானும் எந்த மொழியினனும் வாளுக்கு இரையாகி மாண்டு போவான் என்றும், அவனுடைய வீடும் தரையாய் மீட்கும் ஆற்றலுள்ள கடவுள் வேறொருவருமில்லை."
97 பிறகு அரசன், சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களைப் பபிலோன் மாநிலத்தில் பெருமையளித்து உயர்த்தினான்.
98 கனவில் கிடைத்த எச்சரிக்கையும் நபுக்கோதனசாருக்குப் பைத்தியம் பிடித்தலும்: நபுக்கோதனசார் அரசனாகிய நான் உலகில் எங்கணுமுள்ள எல்லா மக்களுக்கும் இனத்தார்க்கும் மொழியினர்க்கும் அறிவிப்பது: "உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
99 உன்னத கடவுள் எனக்காக வியத்தகு அடையாளங்களையும் விந்தைகளையும் செய்தருளினார்@ அவற்றை அனைவர்க்கும் வெளிப்படையாய்ச் சொல்லிக்காட்ட விரும்புகிறேன்:
100 அவர் செய்து காட்டிய அடையாளங்கள் எவ்வளவு உயர்ந்தவை! அவர் செய்த விந்தைகள் எவ்வளவு வல்லமை மிக்கவை! அவரது அரசு முடிவில்லாத அரசு, அவருடைய வல்லமை என்றென்றும் இருக்கிறது."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, என்றென்றும், ஆண்டவரைப், அவரை, வாழ்த்தி, புகழுங்கள், உயர்த்துங்கள், நீர், ", சித்ராக், நபுக்கோதனசார், அப்தேநாகோ, மிசாக், உமது, ஏனெனில், நாங்கள், எங்கள், நடுவில், அரசன், எரிகிற, எல்லா, அனைவரும், அவர், எங்களை, பெறுவீராக, மன்னன், அப்போது, அந்த, தீச்சூளையின், பொற்சிலையைப், தீச்சூளையில், விழுந்து, நீங்கள், உடனே, கடவுள், ஏற்பாடு, நெருப்பின், என்றான், அரசே, நான், புகழப்படுவீராக, எந்த, ஆண்டவருடைய, சுரமண்டலம், உம்முடைய, மேலும், சூளையின், கருவிகளும், நிறுத்திய, அவர்களுடைய, எக்காளம், பழைய, கின்னரம், முதலிய, இசைக், அவருடைய, தம்புரு, சாம்புகை, கொண்டு, தந்தையரின், ஆண்டவரே, அதற்கு, முன்னிலையில், எங்களுக்கு, கட்டி, எங்களைக், உமக்கு, தானியேல், மூவரும், விட்டு, நோக்கி, பற்றியும், மேல், அவன், ஆகையால், வந்து, நாட்டிய, வெளியே, மாநிலத், வாழ்த்தும், நாகசுரம், ஆகமம், பபிலோன், உம்மை, இருக்கும்படி, நீடிக்கிறது, இரக்கம், நடுவிலிருந்து, நம்மை, சாயல், போலும், இப்பொழுதோ, பலியைப், தங்கள், உன்னத, வல்லமை, அரசு, எவ்வளவு, ஆண்டவரின், மகிமையுள்ள, மகிமையும், உயர்ச்சியும், உயர்த்தப்படவும், போற்றப்படவும், செய்தார்@, வாழ்த்திப், தீயே, அவர்களைத், மீட்டு, வியத்தகு, மீட்டார், உயர்த்துவதாக, குளிரே, புகழ்வதாக, போலவும், செய்த, ஆளுநர்களும், அதிகாரிகளும், தலைவர்களும், கட்டளை, உரத்த, மொழியினர்க்கும், எவனாகிலும், வேண்டும், நொடியிலே, ஒலிக்கத், வரும்படி, பிரதிட்டைக்கு, நாட்டி, என்னும், ஆன்மிகம், திருவிவிலியம், பின்பு, ஆலோசனைக், படிமத்தின், மாநிலங்களின், குற்ற, சிலையைப், அப்பொழுது, பாடல், பாடிய, அசாரியாஸ், அரசனின், கடவுளைப், வாய், மகிமை, திருப்பெயர், இறைவனாகிய, இதுவே, கட்டளையிட்டான், அரசே", கேட்கும், ஒலிக்கக், வீணை, யூதர்கள், பணிய, என்றும், அவர்களை, தெய்வங்களை, கட்டளையை, செய்தோம்