தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 13
2 அவன் எல்சியாவின் மகளும், மிக்க அழகு வாய்ந்தவளும், கடவுளுக்கு அஞ்சி நடந்தவளுமான சூசன்னா என்பவளை மணந்தான்.
3 அவளுடைய பெற்றோர் நீதிமான்களாய் இருந்ததால், தங்கள் மகளை மோயீசனின் திருச்சட்டத்தின்படியே வளர்த்தார்கள்.
4 யோவாக்கீமோ பெருஞ் செல்வம் படைத்தவன்@ அவன் வீட்டருகிலேயே அவனுக்கொரு பழத்தோட்டம் இருந்தது@ அவன் மற்றெல்லாரையும்விட மதிப்பில் உயாந்தவனாதாலால், யூதர்கள் அவனிடம் வந்துபோவது வழக்கம்.
5 அந்த ஆண்டில் மக்கள் நடுவிலிருந்து முதியவர்கள் இருவர் நீதிபதிகளாய் ஏற்படுத்தப்பட்டார்கள்@ அவர்களைக் குறித்து ஆண்டவர், "நீதிபதிகளாய் இருந்து, மக்களை நடத்தும் பொறுப்பேற்ற முதியவர்களால் பபிலோனிலிருந்து அக்கிரமம் கிளம்பிற்று" என்று சொல்லியிருந்தார்.
6 இவர்கள் யோவாக்கீம் வீட்டுக்கு அடிக்கடிப் போவது வழக்கம்@ மக்களும் வழக்குகள் இருந்தால், அவர்கள் அனைவரும் அவர்களிடம் போவார்கள்.
7 நண்பகல் வேளையில் மக்கள் யாவரும் போன பிறகு சூசன்னா தன் கணவனுடைய தோட்டத்திற்குள் போய் உலாவுவாள்.
8 இவ்வாறு அவள் நாடோறும் போய் உலாவிக் கொண்டிருப்பதை அந்த முதியவர்கள் கண்டு அவள் மேல் காமங்கொண்டனர்.
9 அவர்கள் மனம் மழுங்கிப் போயிற்று@ வானத்தை ஏறெடுத்துப் பார்க்காமலும், நீதி முறைமைகளை நோக்காமலும் தாங்கள் கண்களைத் திருப்பிக் கொண்டனர்.
10 இருவரும் அவள்மேல் அடங்காத காமங்கொண்டார்கள்@ ஆயினும் அவர்கள் தங்கள் காம நோயைப் பற்றி ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை@
11 ஏனெனில் அவளை அடைவதற்காகக் கொண்டிருந்த காமவேட்கையை வெளிப்படுத்த வெட்கப்பட்டார்கள்.
12 ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்படி ஆவலோடு வாய்ப்புத் தேடுவார்கள்.
13 ஒருநாள், "சாப்பாட்டுக்கு நேரமாயிற்று, வீட்டுக்குப் போவோம்" என்று சொல்லிக் கிளம்பினார்கள். வெளியே போனவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போனார்கள்.
14 ஆனால் இருவரும் திரும்பி வந்து அவ்விடத்தில் சந்தித்தார்கள்@ திரும்பியதற்குரிய காரணத்தைச் சொல்லும்படி ஒருவரையொருவர் வற்புறுத்தவே, இருவருடைய தீய ஆசையும் வெளியாயிற்று@ ஆதலால் அவளைத் தனிமையில் காணக்கூடிய நேரத்தை இருவருமாகச் சேர்ந்து திட்டம் பண்ணிக் கொண்டார்கள்.
15 ஆகவே, அவர்கள் தகுந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்@ ஒருநாள் வழக்கம் போலவே, அன்றும் சூசன்னா தன் பணிப்பெண்கள் இருவரோடு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கே குளிக்க விரும்பினாள்@ ஏனெனில் வெயில் கொடுமையாக இருந்தது.
16 ஒளிந்து கொண்டு அவளைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவர்களைத் தவிர, வேறு யாரும் அங்கே இல்லை.
17 அவள் பணிப்பெண்களை நோக்கி, "எண்ணெய்யும் தைலமும் எனக்குக் கொண்டு வந்து கொடுத்து விட்டுத் தோட்டத்துக் கதவுகளைச் சாத்திவிட்டுப் போங்கள்@ நான் குளிக்கப் போகிறேன்" என்று சென்னாள்.
18 அவள் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்@ தோட்டத்தின் கதவுகளைச் சாத்தி விட்டு, அவள் கேட்டவற்றையும் கொணர்ந்து கொடுத்த பின்னர், பின் கதவால் வெளியேறினார்கள்@ கிழவர்கள் அங்கே ஒளிந்து கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
19 பணிப்பெண்கள் வெளியே போனவுடனே, அந்தக் கிழவர்கள் இருவரும் எழுந்து அவளிடம் ஓடிவந்து,
20 இதோ, தோட்டத்தின் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன@ யாரும் பார்க்கவில்லை@ உன் மேல் நாங்கள் ஆசை கொண்டுள்ளோம்@ ஆகையால் எங்களுக்கு உடன்படு@ எங்களோடு சேர்.
21 நீ உடன்படாவிட்டால், உன்னோடு கூட ஓர் இளைஞர் இருந்ததாகவும், அதனால் தான் நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டதாகவும் உனக்கெதிராய் நாங்கள் சாட்சிக் சொல்லுவோம்" என்றார்கள்.
22 சூசன்னா பெருமூச்சு விட்டு, "நான் பெரிய நெருக்கடியில் மாட்டிக்கொண்டேன் இதைச் செய்தால் எனக்குக் கிடைப்பது சாவு@ செய்யாவிட்டால், உங்கள் கைகளுக்குத் தப்ப முடியாது.
23 ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவஞ் செய்வதை விட அதைச் செய்யாமல் உங்கள் கைகளில் அகப்படுவது நல்லது" என்றாள்.
24 உடனே சூசன்னா உரத்த குரலில் கூப்பிட்டாள்@ கிழவர்களோ அவளுக்கு எதிராகக் கத்திக் கூப்பிட்டார்கள்.
25 அவர்களுள் ஒருவன் தோட்டத்துக்கு வாயிலண்டை ஓடிக் கதவைத் திறந்தான்.
26 தோட்டத்தில் கூக்குரல் கேட்டவுடன் வீட்டு ஊழியர்கள் அவளுக்கு நடந்ததென்ன என்று காணப் பின்புறக் கதவால் ஓடிவந்தார்கள்.
27 கிழவர்கள் தங்கள் கதையைச் சொன்னார்கள்@ அதைக் கேட்ட ஊழியர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள்@ ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இத்தகையது ஒன்றும் என்றுமே கேள்விப்பட்டதில்லை.
28 மறுநாள் அவளுடைய கணவனாகிய யோவாக்கீமின் வீட்டுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள்@ அவர்களோடு அந்தக் கிழவர்கள் இருவரும் வந்தார்கள்@ சூசன்னாவைக் கொலை செய்ய அவளுக்கு விரோதமாய்ச் சதித்திட்டம் போட்டுக் கொண்டு வந்தனர்.
29 இவர்கள் மக்களைப் பார்த்து, "எல்சியாவின் மகளும் யோவாக்கீமின் மனைவியுமாகிய சூசன்னாவை இங்கே கொண்டு வரும்படி ஆள் அனுப்புங்கள்" என்றார்கள்.
30 அவர்கள் உடனே அனுப்பினார்கள்@ அவள் தன் பெற்றோர்களோடும் பிள்ளைகளோடும், சுற்றத்தார் அனைவரும் உடன் வந்தாள்.
31 சூசன்னா என்பவளோ மிக்க மென்மையும் தோற்றப்பொலிவும் உள்ளவள்.
32 அவள் தன் முகத்தை முக்காட்டினால் மூடியிருந்ததால், அந்தக் கொடியவர்கள் அவள் முக்காட்டை எடுக்கும்படி கட்டளையிட்டனர்@ அப்படியாவது அவள் அழகைப் பருகலாம் என ஏங்கினர்.
33 ஆனால் அவளுடைய உறவினரும், அவளை அறிந்தவர்கள் அனைவரும் அழத்தொடங்கினர்.
34 அப்போது அந்தக் கிழவர்கள் இருவரும் மக்கள் நடுவில் எழுந்து நின்று, தங்கள் கைகளை அவள் தலை மேல் வைத்தனர்.
35 அவளோ அழுது கொண்டு வானத்தை நோக்கினாள்@ ஏனெனில் அவளது உள்ளம் ஆணடவர் மேல் நம்பிக்கை கொண்டிருந்தது.
36 அந்தக் கிழவர்கள் பேசினார்கள்: "நாங்கள் தனியாய்த் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது, இவள் இரண்டு தோழியரோடு சோலைக்குள் வந்தாள்@ வந்த பின் அதன் கதவுகளைச் சாத்தி விட்டுப் பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாள்.
37 அப்பொழுது அங்கே ஒளிந்திருந்த ஓர் இளைஞன் அவளிடம் வந்து அவளோடு படுத்துக் கொண்டான்.
38 நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்@ அந்தக் கெட்ட செயலைப் பார்த்ததும், அவர்களிடம் ஓடிவந்தோம்@ அவர்கள் ஒருவரோடொருவர் சேர்ந்திருப்பதைக் கண்டோம்.
39 அவனை எங்களால் பிடிக்க முடியவில்லை@ ஏனெனில் அவன் எங்களை விட வலுவுள்ளவனாய் இருந்தான்@ கதவுகளைத் திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.
40 ஆனால் நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யாரென்று கேட்டோம்@ இவள் சொல்லவில்லை@ இதற்கு நாங்களே சாட்சி."
41 அவர்கள் முதியவர்களாய் இருந்தாலும், மக்களுக்கு நீதி வழங்குவோராய் இருந்தாலும், மக்கள் அவளைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள்.
42 அப்போது சூசன்னா உரத்த குரலில் கூவியழுது, "காலங் கடந்த இறைவா, நீர் மறைபொருட்களை அறிந்தவர்@ நிகழுமுன் எல்லாவற்றையும் நீர் அறிவீர்.
43 அவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச்சான்று பகர்ந்தனர் என்பதையும் அறிவீர்@ எனக்கு விரோதமாய் அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்னவற்றுள் நான் யாதொன்றையும் செய்யாதிருந்தும், இதோ நான் சாகிறேன்" என்றாள்.
44 ஆண்டவர் அவளுடைய வேண்டுதலைக் கேட்டருளினார்.
45 அவளைக் கொலைக்களத்திற்குக் கொண்டு போகும் போது, தானியேல் என்னும் பெயருள்ள இளைஞனின் பரிசுத்த ஆவியைத் கடவுள் தூண்டிவிட்டார்.
46 அவன் உரத்த குரலில், "இவளுடைய இரத்தப்பழிக்கு நான் பொறுப்பாளியல்லேன்" என்று கத்தினான்.
47 மக்கள் அனைவரும் அவன் பக்கம் திரும்பி, "நீ என்ன சொன்னாய்?" என்றார்கள்.
48 அவன் அவர்கள் நடுவில் நின்றுக் கொண்டு, "இஸ்ராயேல் மக்களே, வழக்கை விசாரியாமலும், உண்மையை ஆராயாமலும் இஸ்ராயேல் மகள் ஒருத்தியைச் சாவுக்குத் தீர்வையிட நீங்கள் மதியிழந்து போனீர்களா?
49 நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பி வாருங்கள்@ ஏனெனில், இந்த மனிதர்கள் அவளுக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள்" என்றான்.
50 ஆகையால் மக்கள் விரைந்து திரும்பி வந்தார்கள்@ முதியவர்கள் தானியேலை நோக்கி, "எங்கள் நடுவில் வந்து உட்கார்ந்து உன் கருத்தை எங்களுக்கு விளக்கிச் சொல்@ ஏனெனில் முதியோருக்குரிய சிறப்பை உனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார்" என்றார்கள்.
51 தானியேல் அவர்களை நோக்கி, "அவர்கள் இருவரையும் வௌ;வேறிடத்தில் பிரித்து வையுங்கள்@ அவர்களை நான் விசாரிக்கிறேன்" என்றான்.
52 அவர்களும் அவ்வாறே வௌ;வேறிடத்திற்கு அகற்றப்பட்டனர். அவர்களுள் ஒருவனைத் தானியேல் கூப்பிட்டு, "அக்கிரமங்களில் முதிர்ந்தவனே, நீ இதற்கு முன் செய்த பழைய பாவங்கள் இப்போது வெளிப்படுகின்றன.
53 மாசற்றவர்களையும் நீதிமான்களையும் கொலை செய்யாதே என்று ஆண்டவர் சொல்லியிருக்க, நீ அநியாயமான தீர்ப்புகளைச் செய்து, மாசற்றவர்களைத் துன்புறுத்திக் கொடியவர்களை விடுதலை செய்தாய்.
54 நிற்க, அவள் பாவஞ் செய்ததைப் பார்த்தேன் என்றாயே, எந்த மரத்தடியில் அவர்கள் ஒன்றாய்ப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாய்? சொல்" என்றான். அதற்கவன், "விளாமரத்தடியில்" என்றான்.
55 அப்போது தானியேல், "நன்றாகப் பொய் சொல்கிறாயே! அது உன் தலை மேல் தான் விழும்@ ஏனெனில் இதோ, வானதூதர் கடவுளிடமிருந்து தீர்ப்புப் பெற்று, உன்னை இரண்டாக வெட்டுவார்" என்றான்.
56 அவனைத் தொலைவில் விலக்கி விட்டு, மற்றவனை வரும்படியாகக் கட்டளையிட்டான். அவன் வந்ததும், அவனைப் பார்த்து, "யூதாவுக்கன்று, கானானுக்குப் பிறந்தவன் நீ@ அழகு உன்னை மயக்கிவிட்டது@ காமம் உன் மனத்தைக் கெடுத்து விட்டது.
57 இஸ்ராயேல் பெண்களுக்கு நீங்கள் இருவரும் இப்படித் தான் இது வரை செய்து வந்தீர்கள்@ அவர்களும் பயத்தினால் தான் உங்கள் கெட்ட கருத்துக்கு இணங்கினார்கள்@ ஆனால் யூதாவின் புதல்வியாகிய இவளால் உங்கள் அக்கிரமத்தைப் பொறுக்க முடியவில்லை.
58 இப்போது கேள்: அவர்கள் எந்த மரத்தடியில் இருந்தார்கள்? சொல்" என்றான்@ அதற்கு அவன், "கருவாலி மரத்தடியில்" என்றான்.
59 தானியேல் அவனை நோக்கி, "நீயும் நன்றாய்ப் பொய் சொல்லுகிறாயே! அது உன் தலை மேல் தான் விழும்@ ஏனெனில் ஆண்டவருடைய தூதர் உங்களை இரண்டு துண்டாக வெட்டி வீழ்த்தவும், இருவரையும் சாகடிக்கவும் வாளை ஏந்திக் கொண்டு நிற்கிறார்" என்றான்.
60 இதைக்கேட்டு அங்குள்ள மக்கள் அனைவரும், நம்பினவர்களைக் காப்பாற்றும் கடவுளை உரத்த குரலில் வாழ்த்திப் புகழ்ந்தார்கள்.
61 மேலும் அந்தக் கிழவர்கள் இருவருக்கும் எதிராக எழும்பினார்கள். ஏனெனில் அவர்கள் பொய்ச்சான்று சொல்லியதைத் தானியேல் அவர்கள் வாயாலேயே எண்பித்துவிட்டான்,
62 அவர்கள் பிறருக்குத் தர நினைத்திருந்த தண்டனையை அவர்களுக்கே தந்தார்கள்@ மோயீசன் திருச்சட்டம் விதித்தபடியே, அவர்களை மக்கள் கொலை செய்தார்கள்@ மாசற்ற இரத்தம் அன்று மீட்கப்பட்டது.
63 எல்சியாவும், அவன் மனைவியும், தங்கள் மகளான சூசன்னாவிடம் யாதொரு தீய நடத்தையும் காணப்படாததால், அவருடைய கணவன் யோவாக்கீம் முதலிய உறவினர்களுடன் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்.
64 தானியேலுக்கு அன்று முதல் மக்கள் மிகுந்த மதிப்புக் கொடுத்து வரலானார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", அவள், ஏனெனில், அவன், மக்கள், கொண்டு, தானியேல், கிழவர்கள், சூசன்னா, என்றான், அந்தக், நான், இருவரும், மேல், அனைவரும், தான், ஏற்பாடு, தங்கள், பழைய, திரும்பி, உரத்த, அங்கே, நோக்கி, விட்டு, வந்து, குரலில், என்றார்கள், உங்கள், வெளியே, ஆண்டவர், நாங்கள், அவளுடைய, அவளுக்கு, அவர்களை, அப்போது, கொலை, வந்தார்கள்@, நடுவில், கதவுகளைச், இஸ்ராயேல், பணிப்பெண்களை, தோட்டத்தின், அந்த, முதியவர்கள், ஆகமம், யோவாக்கீம், நீதி, அவனை, மகளும், இதற்கு, இருந்தாலும், நீர், சாவுக்குத், கெட்ட, இளைஞன், இவள், போது, இரண்டு, எனக்கு, எல்சியாவின், பார்த்து, ஒருவன், பொய்ச்சான்று, சொல்", மரத்தடியில், எந்த, பொய், விழும்@, அன்று, புகழ்ந்தார்கள், உன்னை, செய்து, இப்போது, ஆன்மிகம், கடவுள், யோவாக்கீமின், நீங்கள், திருவிவிலியம், அவர்களும், இருவரையும், எதிராகப், அவர்களுள், உலாவிக், கொடுத்து, எனக்குக், போய், செய்தார்கள்@, பின், சாத்தி, தோட்டத்திற்குள், வானத்தை, யாரும், பணிப்பெண்கள், அவளை, கொண்டிருந்த, சொல்லிக், ஒளிந்து, அவளைக், பற்றி, கதவால், அவர்களிடம், வழக்கம், உடனே, என்றாள், அழகு, மிக்க, தோட்டத்தில், ஒருநாள், பாவஞ், நீதிபதிகளாய், எழுந்து, வீட்டுக்கு, கொண்டிருந்தது, அவளிடம், இவர்கள், எங்களுக்கு, ஆகையால், ஊழியர்கள்