தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 14
2 தானியேல் அரசனோடு நெருங்கிப் பழகினார். அவனுடைய நண்பர்களுக்கும் மேலாகச் சிறப்பு பெற்று வந்தார்.
3 பபிலோனியரிடத்திலே பேல் என்னும் பெயருடைய சிலையொன்று இருந்தது@ அதற்கு ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு படி கோதுமை மாவும் நாற்பது ஆடும் ஆறு சால் திராட்சை இரசமும் பலியிடுவார்கள்.
4 அரசனும் அதை வணங்கி வருவான்@ அதை வழிபட ஒவ்வொரு நாளும் போவான்@ ஆனால் தானியேல் தம் கடவுளை மட்டுமே வழிபடுவார்@ அரசன் அவரை நோக்கி, "நீ ஏன் பேலை வழிபடுவதில்லை?" என்று கேட்டான்.
5 அதற்கு அவர் அரசனைப் பார்த்து, "மனிதர் கையினால் செய்யப்பட்ட சிலைகளை நான் வணங்குகிறதில்லை@ ஆனால் விண்ணையும் மண்ணையும் படைத்து, உயிர்கள் அனைத்தையும் ஆண்டு வருகிற உயிருள்ள கடவுளை வணங்குகிறேன்" என்றார்.
6 அரசன் அவரை நோக்கி, "பேல் தெய்வம் உனக்கு உயிருள்ள கடவுளாகத் தென்படவில்லையா? அது நாடோறும் எவ்வளவு சாப்பிடுகிறது, எவ்வளவு குடிக்கிறது என்பதெல்லாம் உனக்குத் தெரியாதா?" என்று கேட்டான்.
7 தானியேல் புன்முறுவல் செய்தவராய் அரசனிடம், "அரசே, ஏமாறாதீர்@ அது உள்ளே சிலை@ அது ஒருபோதும் சாப்பிட முடியாது" என்றார்.
8 அரசன் கோபங்கொண்டு தன் பூசாரிகளைக் கூப்பிட்டு, "அந்தப் பலிகளை புசிப்பது யாரென நீங்கள் எனக்குச் சொல்லாவிட்டால் நீங்கள் சாவீர்கள். ஆனால் அவற்றைப் பேல் தெய்வந்தான் சாப்பிடுகிறது என்பதை நீங்கள் காண்பித்தால் தானியேல் சாவான்@ ஏனெனில், அவன் பேல் தெய்வத்திற்கு எதிராய்ப் பழிச்சொல் சொன்னான்" என்றான்.
9 அப்போது தானியேல், "உமது சொற்படியே ஆகட்டும்" என்று அரசனுக்குச் சொன்னார்.
10 பூசாரிகளின் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் தவிர, பூசாரிகள் மட்டும் மொத்தம் பேலுக்கு எழுபது பேர் இருந்தனர்.
11 அரசன் தானியேலுடன் பேல் தெய்வத்தின் கோயிலுக்கு வந்தான். பேலின் பூசாரிகள் சொன்னார்கள்: "இதோ, நாங்கள் வெளியே போய் விடுகிறோம்@ அரசே, நீர் இறைச்சியையும் திராட்சை இரசத்தையும் வைத்து விட்டுக் கதவைச் சாற்றி உமது மோதிரத்தால் முத்திரையிட்டுச் செல்லும். நாளைக் காலை நீர் உள்ளே வந்து பார்க்கும் போது பேல் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்திருப்பதை நீர் காண்பீர்@ அப்படிச் சாப்பிடாதிருந்ததால் நாங்கள் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்@ சாப்பிட்டிருந்தால், எங்களுக்கு எதிராய்ப் பொய் சொன்ன தானியேல் சாகவேண்டும்."
12 இவ்வாறு அவர்கள் துணிவோடு பேசியதற்குக் காரணம்: மேசைக்கு அடியில் அவர்கள் திருட்டு வழி செய்து வைத்திருந்தனர்@ அதன் வழியாய் அவர்கள் உள்ளே வந்து அவற்றைச் சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
13 அவர்கள் வெளியே போன பிறகு, அரசன் பேல் தெய்வத்தின் முன்னால் உணவுப் பொருட்களை இட்டான்@
14 தானியேல் தம் வேலைக் காரர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் சாம்பல் கொண்டு வந்தார்கள்: அவர்கள் அரசன் முன்னிலையிலேயே கோயில் முழுவதும் சாம்பலைத் தௌ;ளினாற் போலத் தூவினார்கள்@ பிறகு இவர்கள் வெளியே வந்து, கதவைப் பூட்டி அரச மோதிரத்தால் முத்திரையிட்டுப் போனார்கள்.
15 பூசாரிகளோ வழக்கம் போலத் தங்கள் மனைவி மக்களோடு உள்ளே வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டுக் குடித்துச் சென்றார்கள்.
16 விடியற்காலையில் அரசன் எழுந்தான்@ தானியேலும் உடன் வந்தார்.
17 அரசன், "தானியேலே, முத்திரைகள் சரியாய் இருக்கின்றனவோ?" என்று கேட்க, அவர், "அரசே, சரியாய் இருக்கின்றன" என்றார்.
18 கதவைத் திறந்தவுடனே, அரசன் மேசையைப் பார்த்து விட்டு, "ஓ பேல் தெய்வமே! நீர் உண்மையிலேயே மகத்துவம் உள்ளவர், உம்மிடத்தில் யாதொரு கபடுமில்லை" என்று உரத்த குரலில் கத்தினான்.
19 தானியேல் சிரித்துக் கொண்டே, அதற்கு மேல் உள்ளே போகாதபடி அரசனை நிறுத்தி, "இதோ, தளவரிசையை நோக்குங்கள்@ இவை யாருடைய காலடிகள், தெரியுமா?" என்றார்.
20 அரசன், "ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரின் காலடிகளைக் காண்கிறேன்" என்று சொல்லிக் கோபங்கொண்டு, பூசாரிகளையும், அவர்களுடைய மனைவி மக்களையும் பிடித்தான்@
21 அவர்கள், தாங்கள் உள்ளே நுழைந்து மேசையிலிருந்தவற்றைச் சாப்பிட வந்த திருட்டு வழிகளை அவனுக்குக் காட்டினார்கள்.
22 ஆகவே, அரசன் அவர்களைக் கொலை செய்து, பேல் தெய்வத்தைத் தானியேலிடம் கையளித்தான்@ அவர் அதையும் அதன் கோயிலையும் தகர்த்தார்.
23 அங்கே ஒரு பெரிய நாகப்பாம்பும் இருந்தது@ அதையும் பபிலோனியர் வணங்கி வந்தனர்@
24 அரசன் தானியேலை நோக்கி, "இதோ, இது உயிருள்ள தெய்வமன்று என நீ இப்போது சொல்ல முடியாதே@ ஆகையால் இதை வணங்கு" என்றான்.
25 அதற்குத் தானியேல், "கடவுளாகிய ஆண்டவரையே நான் வணங்குகிறேன்@ ஏனெனில் அவர் தான் உயிருள்ள கடவுள்@ மேலும், அரசே, எனக்கு நீர் அனுமதி கொடுத்தால், கத்தி, தடி இவற்றை எடுக்காமலே, நான் இந்த நாகத்தைக் கொன்று விடுகிறேன்" என்றார்.
26 அதற்கு அரசன், "சரி, அனுமதி தருகிறேன்" என்றான்.
27 தானியேல், கீலும் கொழுப்பும் மயிரும் எடுத்து ஒன்றாய்ச் சேர்த்துச் சமைத்து உருண்டைகளாகத் திரட்டி, அந்தப் பாம்பின் வாயிலிட்டார். அதையுண்டதும் பாம்பு வயிறு வெடித்து இறந்தது@ அவர், "நீங்கள் கும்பிட்டு வந்த தெய்வத்தைப் பாருங்கள்" என்று காட்டினார்.
28 பபிலோனியர் இதை அறிந்து மிகவும் சினங்கொண்டு, அரசனுக்கு விரோதமாய்க் கூட்டங் கூடி, "அரசர் யூதராகி விட்டார்@ அவர் பேல் தெய்வத்தை அழித்தார், இப்பொழுது நாகத்தையும் கொன்றார்@ அதுவுமின்றி நம் பூசாரிகளையும் கொலைசெய்தார்" என்று சொல்லி, அரசனிடத்தில் வந்து,
29 தானியேலை எங்களிடம் கையளியும்@ இல்லையேல் உம்மையும் உம் குடும்பத்தாரையும் ஒழித்து விடுவோம்" என்று கூவினார்கள்.
30 அவர்கள் சீற்றத்துடன் தன்னை மருட்டுவதை அரசன் கண்டு, கட்டாயத்தின் பேரில் தானியேலை அவர்களிடம் கையளித்தான்.
31 அவர்களோ தானியேலைக் கொண்டு போய்ச் சிங்கங்களின் குகையில் போட்டார்கள்@ அங்கே அவர் ஆறு நாட்கள் இருந்தார்.
32 அந்தக் குகையில் ஏழு சிங்கங்கள் இருந்தன@ அவற்றுக்கு நாடோறும் இரண்டு மனித உடல்களும் இரண்டு ஆடுகளும் கொடுப்பது வழக்கம்@ தானியேலை அவை தவறாமல் கொன்றுத் தின்னும்படி செய்வதற்காக, அவற்றுக்கு அந்த ஆறு நாட்களும் வழக்கமான உணவு தரப்படவே இல்லை.
33 அக்காலத்தில் யூதேயாவில் ஆபகூக் என்ற இறைவாக்கினர் ஒருவர் இருந்தார்@ அவர் கூழ் தயாரித்து ஒரு கலத்தில் எடுத்துக்கொண்டு, உரொட்டித் துண்டுகளும் எடுத்துக்கொண்டு தன் வயலில் அறுக்கிறவர்களுக்குக் கொண்டு போனார்.
34 ஆண்டவருடைய தூதர் ஆபகூக்குக்குத் தோன்றி, "நீ வைத்திருக்கும் உணவைப் பபிலோனில் சிங்கக் குகையில் இருக்கும் தானியேலுக்குக் கொண்டுப் போய்க் கொடு~ என்றார்.
35 அதற்கு ஆபகூக், "ஆண்டவனே, பபிலோனை நான் பார்த்ததில்லை, அந்தக் குகையும் எனக்குத் தெரியாதே" என்றார்.
36 அப்போது, ஆண்டவருடைய தூதர், அவர் தலை மயிரைப் பிடித்து, அவரை வாயு வேகத்தில் தூக்கிக் கொண்டு போய்ப் பபிலோனில் குகைக்கு மேலே இறக்கினார்.
37 ஆபகூக் உரக்கக் கூவி, "கடவுளின் ஊழியனாகிய தானியேலே, உனக்குக் கடவுள் அனுப்பிய உணவைப் பெற்றுக்கொள்" என்று சொன்னார்.
38 அப்பொழுது தானியேல், "இறைவா, என்னை நீர் நினைவு கூர்ந்தீரே@ உமக்கு அன்பு செய்கிறவர்களை நீர் கைவிடவில்லை" என்றார்.
39 தானியேல் எழுந்து உட்கார்ந்து சாப்பிட்டார்@ உடனே ஆண்டவருடைய தூதர் ஆபகூக்கை அவரது இடத்திற்குத் திரும்பவும் கொண்டு சேர்த்தார்.
40 ஏழாம் நாளில், தானியேலைக் குறித்துத் துக்கம் கொண்டாடி அழும்படியாக அரசன் குகைக்கு வந்தான்@ வந்து உள்ளே பார்த்தான்@ இதோ, தானியேல் சிங்கங்களின் நடுவில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
41 அரசன் பெருங்கூக்குரலிட்டு, "ஆண்டவரே, தானியேலின் இறைவா, நீர் மேன்மையுள்ளவர், உம்மையன்றி வேறு தெய்வமில்லை" என்றான். உடனே சிங்கக் குகையிலிருந்து தானியேலைப் பிடித்து வெளியே தூக்கினான்.
42 பிறகு, அவருடைய அழிவை விரும்பி முயற்சி செய்தவர்களை குகைக்குள்ளே எறிந்தான்@ எறிந்த நொடியிலேயே அவன் கண்முன் அவர்கள் விழுங்கப்பட்டார்கள்.
43 அப்போது அரசன், "உலகெங்கணும் உள்ள அனைவரும் தானியேலின் கடவுளுக்கு அஞ்சக்கடவார்கள்: ஏனெனில் சிங்கக் குகையினின்று தானியேலைக் காப்பாற்றினவர் அவரே@ அவரே மீட்பர்@ மண்ணுலகில் விந்தைகள் செய்கிறார்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தானியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", அரசன், தானியேல், பேல், அவர், நீர், என்றார், உள்ளே, வந்து, கொண்டு, அதற்கு, என்றான், ஏற்பாடு, வெளியே, நான், பழைய, நீங்கள், உயிருள்ள, தானியேலை, அரசே, ஏனெனில், பிறகு, தூதர், சிங்கக், ஆண்டவருடைய, ஆபகூக், தானியேலைக், குகையில், அப்போது, மனைவி, அவரை, நோக்கி, ஆகமம், அந்தக், வந்தார், அதையும், அவற்றுக்கு, வந்த, சிங்கங்களின், இருந்தது@, பபிலோனியர், ஒவ்வொரு, அனுமதி, இரண்டு, அங்கே, எடுத்துக்கொண்டு, இறைவா, குகைக்கு, உட்கார்ந்து, உடனே, தானியேலின், பிடித்து, பபிலோனில், பூசாரிகளையும், ஆன்மிகம், திருவிவிலியம், உணவைப், என்னும், தானியேலே, கேட்டான், பார்த்து, உமது, சொன்னார், பூசாரிகள், எதிராய்ப், அவன், கோபங்கொண்டு, சாப்பிட, அந்தப், எவ்வளவு, நாடோறும், தெய்வத்தின், நாங்கள், திராட்சை, வழக்கம், நாளும், போலத், சாப்பிடுகிறது, செய்து, திருட்டு, கடவுளை, மோதிரத்தால், வணங்கி, எல்லாவற்றையும், சரியாய்