நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப் போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும் வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து |
நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப் பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங் கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம் பொருத நகைமடவார் புன்கலவி யின்ப மருவி மயங்கி வருவரோ - விருபொழுது |
நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங் கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந் தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும் பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே யீங்கொன்றை வாரா யினி. |
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும் வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல நெஞ்சமே வாராய் நினைத்து. |
நெஞ்சு விடு தூது முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நெஞ்சு, தூது, விடு, நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், நெஞ்சமே, இலக்கியங்கள்