நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பாடலா ராடலார் பண்பலார் நண்பலா ராடலா ராட லகன்பதியாங் - கூடலார் காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான் பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற் சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற் பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண் மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ் |
அடையும் இடம்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென் றிகலா விருளலகை போலிகலே பேசு முலகா யதன்பா லுறாதே - பலகாலுந் |
தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக் கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித் தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப் பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன் மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத் தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும் வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை |
யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச் செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர் வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத மூடருடன் கூடி முயங்காதே - நீட வழித்துப் பிறப்ப தறியா தரனைப் பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத் தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், நெஞ்சு, சித்தாந்த, சாத்திரங்கள், தூது, விடு, மதுமுத்தி, திளைக்கு, இலக்கியங்கள், நின்று