நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஞானாசாரியார்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர் போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார் |
சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான் வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங் குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப் பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங் கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார் |
குரூபதேசம்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப் பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம் நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய |
தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான் கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும் வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான் மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய |
வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச் சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற |
பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக் கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன் றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள் வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக் கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், நெஞ்சு, சித்தாந்த, தூது, விடு, இலக்கியங்கள்