பட்டினப்பாலை - பத்துப்பாட்டு
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் |
235 |
உழிஞைப் பூவைச் சூடி நாடு விரிவாக்கப் போரில் ஈடுபட்டான் - திருமாவளவன் உழிஞைப் பூச் சூடிப் போருக்கெழுந்தான். உழிஞைப் பூவுடன் பல்வேறு பூளைப் பூக்களையும் சேர்த்துச் சூடியிருந்தான். இவன் போருக்கெழுந்ததும் ‘நல்ல இரை பெறலாம்’ என்று எண்ணி வானத்தில் பருந்துகள் உலா வந்தன. யானைமீது சென்ற இவன் பெரிய பாறாங்கல் போலவும், பருந்துகள் பறந்தது பாறாங்கல்லில் படரும் பல்வேறு கொடிகள் போலவும் இருந்தன.
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம் மாக்கண் அகலறை அதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை எடுப்பி |
போர்முழக்கம் வெற்றிக்குப் பின்னர் தண்ணோசை முழக்கமாக மாறியது - இவனது காவல் முரசம் பேயின் கண்போல் இருந்தது. அதன் அகன்று விரிந்த பெரிய வாயில் எழுந்த முழக்கம் மலைப்பாறைகளில் எதிரொலித்தது. கரிகாலன் பகைவரின் முனைப்பைக் கெடுத்து முன்னேறினான். முன்னின்ற போராளிகளைத் திரியை முறுக்குவது போலச் சுழற்றி முறுக்கினான். வெற்றிக்குப் பின் தன் வெற்றிமுரசை மக்களுக்குக் குளுமை தரும் ஓசையுடன் [தண்பனை] முழக்கினான்
பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட | 240 |
மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக் கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவிய மயங்கி நீரற்று அறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும் |
245 |
பகைவர் நாட்டுப் பாழ்நிலை – வளவயல் மாற்றம். கரிகாலன் வெற்றிக்கு முன் இவன் வென்று அழிப்பதற்கு முன் பகைவரின் நாடு வளமுடன் செழித்திருந்தது. வயல்களில் கரும்பும் செந்நெல்லும், வாவிகளில் குவளையும் நெய்தலும், பொய்கையில் முதலைகள் என்று அதன் செழுமை இருந்தது. கரிகாலன் வெற்றிக்குப் பின் இவனது வெற்றிக்குப் பின் வயல்களும் வாவிகளும் நீரற்று நிலம் மயக்கமுற்று (திணைமயக்கம் எய்தி) வறண்ட நிலத்தில் பூக்கும் புதவம் பூக்களும் செருந்திப் பூக்களும் பூக்கும் நிலையைப் பெற்றன. மக்கள் பயிர் செய்த நிலைமை மாறிக் கலைமான்களும் காட்டுமான்களும் விளையாடும் காடாக மாறியது.
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற் பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப |
250 |
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும் |
பகைவர் நாட்டுப் பாழ்நிலை, மக்கள் மன்றத்தில் மாற்றம், கரிகாலன் வெற்றிக்கு முன் - இவனது வெற்றிக்கு முன் பகைவர் நாட்டில் அந்தி நேரம் வந்ததும் கொண்டி மகளிர் ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஊர்மன்றத்தை மெழுகிப் பூ வைத்து அங்கிருந்த தூணில் விளக்கேற்றினர். அவர்களும் அங்கு வரும் புதியவர்களும் மன்றிலிருந்த கந்திற் பாவையைத் தொழுதனர். கரிகாலன் வெற்றிக்குப் பின்- வழிபட்ட அந்தத் தூண்கள் இவனது வெற்றிக்குப் பின் வெறுங் கல்லுத் தூணாக மாறியது. களிறும் பிடியும் புணர்ச்சிக்காலத்தில் அதில் உரசிக்கொள்ளும்படியும், உறைவிடங்களாகக் கொள்ளும்படியும் ஆயிற்று.
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும் பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் |
255 |
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும |
260 |
பகைவர் நாட்டுப் பாழ்நிலை – தெருநிலை மாற்றம் கரிகாலன் வெற்றிக்கு முன் - அப்போது தெருவில் எப்போதும் விழாக்கொண்டாட்டம். தெரு வாசலில் பூக்களைத் தூவி மக்கள் முதுவாய்க் கோடியரை வரவேற்பர். முதுவாய்க் கோடியரின் யாழிசையும் முழவொலியும் தெருவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை மக்கள் கேட்டு மகிழ்வர். கரிகாலன் வெற்றிக்குப் பின் - இப்போது விழாத்தெருக்கள் பேய்மன்றங்களாக மாறிவிட்டன. பூத் தூவிய இடங்களில் நெருஞ்சிமுள் பூத்துள்ளது. அருகம்புல் பம்பிக் கிடக்கிறது. யாழொலி கேட்ட இடத்தில் குள்ளநரி ஊளையிடும் ஓசை கேட்கிறது. அழுகையொலி, கூகையின் குழறல், ஆண்டலையின் அழைப்பு, பிணம் தின்ற கூளிகள் அசைபோடும் அதவல், பிணம் தின்னும் பேய்மகளின் பித்தாட்டம் போன்றவை நிகழ்ந்தன.
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில் ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் |
265 |
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும் அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப் |
பகைவர் நாட்டுப் பாழ்நிலை, வாழ்விடங்களில் மாற்றம், கரிகாலன் வெற்றிக்கு முன் - அன்று விருந்தூட்டிய வீடுகள், கிளி மிழற்றும் காப்பிடங்கள், வளைவுக்கால் அமைக்கப்பட்ட மாடி வீடுகள், (arch entrance) அதில் சோற்றுச் சமையல் மணக்கும் அட்டில் சுவர். விருந்தூட்டிய பின் மிஞ்சிக் கிடக்கும் சோற்றை வளைவு வாயிலில் வைத்துக்கொண்டு வழங்கக் காத்திருந்த நல்ல இல்லங்களின் உயர்திணைப் பண்பு. அவ்விடங்களில் வளர்ப்புப் பச்சைக் கிளிகள் விருந்தினரை அழைக்கும் மழலைமொழி. மழலை மொழிக்குக் கைம்மாறாகப் பால் ஆர்த்தும் பாவையர் நிலை. கரிகாலன் வெற்றிக்குப் பின் - அந்த இடங்களில் பாலைநிலத்து எயினர்களின் நடமாட்டம். செருப்பை வெளியில் கழற்றிவிட்டு அன்று நுழைந்த இல்லங்களில் இன்று அவர்கள் செருப்புக் காலோடு நடமாடுகின்றனர். அன்று கிளி மழலை கேட்ட இடங்களில் இன்று கூகையின் குழறல் ஒலி பகலிலேயே கேட்கிறது. உடுக்கடிக்கும் துடிப்பறை கேட்கிறது. அன்று விருந்தூட்டிய இடங்களில் இன்று கொள்ளையடித்த உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அன்று காவலரின் காப்பகம், இன்று மேவலரின் (வேண்டாதவர்களின்) விளையாட்டிடம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, கரிகாலன், வெற்றிக்குப், பின், முன், பகைவர், வெற்றிக்கு, அன்று, இன்று, இவனது, இடங்களில், மாற்றம், பாழ்நிலை, மக்கள், நாட்டுப், இலக்கியங்கள், பட்டினப்பாலை, உழிஞைப், கேட்கிறது, விருந்தூட்டிய, முதுவாய்க், இவன், பத்துப்பாட்டு, மாறியது, கூகையின், மழலை, கேட்ட, கிளி, குழறல், மிழற்றும், அதில், வீடுகள், பிணம், சங்க, பெருநல், பருந்துகள், நெய்தலும், பகைவரின், பெரிய, முரசம், போலவும், நீரற்று, பல்வேறு, சென்று, மகளிர், பூக்களும், பூக்கும், நாடு, சூடிப், அந்தி