பட்டினப்பாலை - பத்துப்பாட்டு
கொலைகடிந்தும் களவுநீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் |
200 |
நல்லனெடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் |
குடிமக்களுக்கு நிம்மதி எங்கிருந்து வந்தது? அவர்களின் வாழ்க்கைப் பாங்கிலிருந்து வந்தது. வாழ்க்கைப் பாங்கு எப்படி இருந்தது? கொலைத்தொழிலை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். களவுத்தொழிலை அவர்கள் இல்லாமல் செய்துவிட்டார்கள். தேவர்களைப் பேணிப் பாதுகாத்தனர். தேவர்களுக்கு வேள்வி உணவை ஊட்டினர். பால்மாடுகள் மட்டுமல்லாமல் காளைமாடுகளையும் அவர்கள் பேணிவந்தனர். நான்மறையாளர்களின் புகழைப் பரப்பினர். பசித்தவர்களுக்கு உணவு படைக்கும் போது சுட்ட பலகாரங்களையும் சேர்த்துப் படைத்தனர். இப்படியெல்லாம் வாழ்வதுதான் புண்ணியம் என்று கருதினர். இப்படிப்பட்ட வாழ்க்கையில் முட்டுப்பாடு இல்லாமல் பிறருக்கு ஈரநிழல் தந்து வாழ்ந்து வந்தனர்.
கொடுமேழி நசையுழவர் | 205 |
நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத |
210 |
பல்பண்டம் பகர்ந்துவீசும் |
வணிகர் அறம் - உழவரின் ஏரில் இரண்டு மாடுகள் பூட்டிய நுகத்தின் நடுவில் இருக்கும் பகலாணி போல நடுவுநிலை கொண்ட நன்னெஞ்சோடு வணிகர்கள் வாணிகம் செய்தனர். தமக்குப் பழி வந்துவிடுமோ என்னும் அச்சத்தோடு சொன்னசொல் மாறாமல் வாய்மையையே பேசினர். தாம் கொடுக்கும் பொருளையும், தாம் பிறரிடமிருந்து விலையாக வாங்கும் பொருளையும் ஒத்த நிறையுடையதாகக் கருதினர். எனவே மதிப்புக்கு அதிகமாக வாங்குவதோ, குறையாகக் கொடுப்பதோ அவர்களின் வாழ்க்கையில் இல்லை.
தொல்கொண்டித் துவன்றிருக்கைப் |
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு |
215 |
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் |
வேறு வேறு மொழி பேசும் மக்கள் கலந்து உறவாடிக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் - ‘தொல்கொண்டி’ என்பது மூதாதையரிடமிருந்து பெற்ற செல்வம். இவ்வகையில் செல்வம் பெற்று வாழும் பல்வேறு ஆயத்தார் ஊரில் ஒன்றாகப் பழகி வாழ்ந்து வந்தனர். என்றாலும் அவர்கள் செல்வ நிலையில் வெவ்வேறு உயர்வுகளைப் பெற்றிருந்தனர். இப்படிப்பட்டவர்கள் விழாக் கொண்டாடும் ஊருக்கு ‘முதுவாய் ஒக்கல்’ என்று போற்றப்படும் புலவர், பாணர், கூத்தர் முதலானோர் சென்று கூடியிருப்பது போல. புகார் நகரத்தில் பல்வேறு மோழிகளைப் பேசும் மக்கள் வந்து தங்கிப் போய்க்கொண்டிருந்தனர். பன்மொழி பேசுவோரில் குற்றமற்ற சிலர் புகார் மக்களோடு கலந்து இனிமையாகத் தடையின்றிப் பழகி வாழ்ந்து வந்தனர். இதுவரையில் புகார் நகரத்தைப் பாடிய புறப்பொருள் பற்றிய புறத்திணைப் பாடல் இங்கு அகத்திணையாக மாறுகிறது.
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் |
தலைவனது அவல நிலை
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் |
220 |
நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக் கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறான், தலைவன் . இச்செய்திதான் பாட்டின் பயனிலை - பொருளும் அருளும், கலையும் காமமும், வளமும் மகிழ்வும் மலர்ந்து முட்டுப்பாடின்றி மண்டிக் கிடக்கும் புகார்ப் பட்டினமே கொடையாகவோ உழைப்பின் வழியாகவோ பெறுவதாக இருந்தாலும், நெஞ்சே! நான் சொல்வதைக் கேள்! நீண்ட கூந்தலையுடைய இந்தப் பெண்ணாகிய என்னவளைத் தனியே விட்டுவிட்டுப் பொருள் தேட உன்னுடன் வரமாட்டேன். பொருளையும் இவளையும் நினைக்கும் நெஞ்சே! நீ வாழி!
திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும் பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் |
225 |
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து உருகெழு தாயம் ஊழினெய்திப் |
கரிகாலன் அரசனானது - வரிப்புலிக்குட்டி கூட்டில் வளர்ந்தது போல் திருமாவளவனின் இளமைக் காலம் அமைந்திருந்தது. குழியில் விழுந்த ஆண்யானை குழியின் கங்குக்கரையைச் சரித்து இடித்துக்கொண்டு மேடேறித் தன் பெண் யானையோடு சேர்ந்தது போல் திருமாவளவன் தன் ஆட்சியைப் பெற்றான். நுட்பமாக எண்ணிப் பார்த்துப் போரிடத் துணிந்தான். பகைவர் செறிந்திருக்கும் கோட்டையை முற்றுகையிட்டு அவர்களுடன் வாளேந்திப் போரிட்டுத் தனக்கு உரிமையாகிய தாய ஆட்சியைப் பெற்றான். இது அவனுக்குக் கிடைத்த முறையான ஊழ்வெற்றி.
பகைவர்மேல் போருக்கு எழுதல்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் |
230 |
உகிருடை யடிய ஓங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் |
கரிகாலனுக்கு அரசு போர் வெற்றியால் கிடைத்தது - அரசுத்தாயம் பெற்ற மகிழ்வோடு திருமாவளவன் அமையவில்லை. அவனை அழிக்க முற்பட்டோரின் அரண்களைத் தொலைத்தான். வளவனின் யானை அவனது பகைவரின் முடிபுனைந்த தலைகளைத் தன் முன்னங்கால் நகங்களால் புரட்டியது. பகைவரின் யானை, புரவி, வயவர் அனைவரும் வீழ்ந்தனர். பெயர் விளக்கம் : கரியின் காலால் வளம் பெற்ற வளவன். அதனால் கரிகாலன் எனப்பட்டான். மா = கரிமா = யானை, திருவை மாவால் பெற்ற வளவன் = திருமாவளவன். சான்று இங்குக் கூறப்பட்டுள்ள யானைப்போர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, பெற்ற, யானை, நெஞ்சே, இலக்கியங்கள், திருமாவளவன், வந்தனர், பொருளையும், புகார், பட்டினப்பாலை, பத்துப்பாட்டு, வாழ்ந்து, பகைவரின், பழகி, பல்வேறு, செல்வம், வயவர், பெற்றான், கரிகாலன், போல், ஆட்சியைப், வரமாட்டேன், வளவன், வேறு, இல்லாமல், கருதினர், வாழ்க்கைப், அவர்களின், சங்க, வந்தது, இப்படிப்பட்ட, வாழ்க்கையில், பேசும், மக்கள், காங்கு, பட்டினம், தாம், மொழி, கலந்து