மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள்
கயம்கண் டன்ன அகன்பை யங்கண் மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும |
260 |
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி இகந்துசேட் கமழும் பூவும் உண்டோர் மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார் இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் |
265 |
இடனும் வலனும் நினையினர் நோக்கிக் குறியறிக் தவையவை குறுகாது கழிமின் |
குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள். கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள். விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள். இடப்புறமும் வலப்புறமும் உள்ள பெரிய மரங்களையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு வழியைத் தவற விட்டுவிடாதீர்கள்.
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக் கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின் நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் |
270 |
கூட்டில் வாழ்வது போல் ஆலமரக் கிளைகளில் ஒலிக்கும் பறவைகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே செல்லுங்கள்.
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன
மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின் ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத் தேஎ மருளும் அமைய மாயினும் இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும் குறவரு மருளுங் குன்றத்துப் படினே |
275 |
அகன்கட் பாறை துவன்றிக் கல்லென இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின் |
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்
பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக் காடுகாத் துறையுங் கானவர் உளரே நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள |
280 |
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி |
வெயில் படாத மரமடர்ந்த காடாயினும், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் மானைத் தேடிக்கொண்டு குறவர்கள் வில்லும் கையுமாக அலைவர். அவர்களே திசை தடுமாறும் ஞாயிறு தெரியாக் கானகம் அது. அக் குன்றங்களுக்குச் சென்றால் பாறைமீது அமர்ந்துகொண்டு உங்களுடைய இசைக்கருவிகளை முழக்குங்கள் காட்டைக் காப்பாற்றிக்கொண்டு வாழும் கானவர்கள் அங்கெல்லாம் இருப்பார்கள். வழி தவறியவர்களுக்கெல்லாம் உதவ ஓடோடி வருவார்கள். தண்ணீரின் ஓசை போல் பாதுகாப்புக் குரல் கொடுத்துக் கொண்டே உங்களிடம் வந்து சேர்வார்கள்.
உண்டற் கினிய பழனுங் கண்டோர் மலைதற் கினிய பூவுங் காட்டி ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற நும்மி னெஞ்சத் தவலம் வீட |
285 |
இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர் |
கானவர் நீங்கள் உண்ணுவதற்குச் சுவையான பழங்களைத் தருவார்கள். உங்களை மகிழ்விக்கப் பூ மாலை போடுவார்கள். உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் நேர்ந்த உடல்துன்பம், உள்ள-உளைச்சல் அகிய அவலத்தைப் போக்குவார்கள். நீங்கள் அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தா1ர்களுக்கும் இனியவர் ஆகிவிடுவீர்கள்.
அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் |
290 |
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ |
திசை காட்டும் அறிஞர்கள் கூறிய வழியில் செல்ல வேண்டும். குறுகிய, நீண்ட வழிகளைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும். புதியவர்களைப் பார்த்தால் அச்சம் வரும். பலவகையான பூக்கள் உதிர்ந்து வரி வரியாகக் கிடக்கும் நிழலில் அசதியைப் போக்க அமர்ந்திருக்கும் போது மலையோசை (மலைபடுகடாம்) பலவற்றைக் கேட்கலாம்.
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும் அருவிய நுகரும் வானர மகளிர் வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் |
295 |
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை |
குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும். கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்-அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வா1ங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும். அரம்பை என்பது வாழைமரம். வாழைமரம் போல் அழகிய தோற்றம் கொண்டவர் அரம்பையர். அரம்பையர் என்போர் அரமகளிர். அரம்பையர் கற்பனைத் தெய்வம். பெண்தெய்வம். இது தமிழ்ச்சொல்.
இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல் சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் |
300 |
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் |
யானை ஒலி - தன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் சங்கூதுவது போன்ற யானையின் ஒலி. கானவன் அழுகை - கானவன் குகையில் படுத்திருந்தான். அவன் பாறைமேல் வைத்திருந்த அம்பு நழுவி அவன்மேல் விழுந்துவிட்டது. அப்போது அவன் அழும் ஒலி கொடிச்சியர் பாடல் - புலி பாய்ந்ததால் தன் கணவன் மார்பில் உண்டான புண்ணை ஊசிநரம்பால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடும் காப்புப் பாடலின் ஒலி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, போல், மலைபடுகடாம், இலக்கியங்கள், கானவர், பத்துப்பாட்டு, கிடக்கும், அரம்பையர், கானவன், அவன், வேண்டும், செல்ல, கூறிய, கொட்டும், வாழைமரம், யானை, பாடல், அழுகை, நீங்கள், அரமகளிர், இசைக்கருவிகளை, பட்ட, உள்ள, செல்லுங்கள், யானையின், கமழும், சங்க, ஞாயிறு, வழியில், திசை, வந்து, குறவர்கள், கினிய