முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.062.திருக்கோளிலி
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.062.திருக்கோளிலி
1.062.திருக்கோளிலி
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
667 |
நாளாய போகாமே ஆளாய வன்புசெய்வோ கேளாய்நங் கிளைகிளைக்குங் கோளாய நீக்குமவன |
1.062.1 |
அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
668 |
ஆடரவத் தழகாமை தோடரவத் தொருகாதன் பாடரவத் திசைபயின்று கோடரவந் தீர்க்குமவன் |
1.062.2 |
படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப் பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.
669 |
நன்றுநகு நாண்மலரால் டொன்றிவழி பாடுசெய கன்றிவரு காலனுயிர் கொன்றைமலர் பொன்றிகழுங் |
1.062.3 |
அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்.
670 |
வந்தமண லால்இலிங்கம் சிந்தைசெய்வோன் றன்கருமந் தந்தைதனைச் சாடுதலுஞ் கொந்தணவு மலர்கொடுத்தான் |
1.062.4 |
மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்.
671 |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி நஞ்சமுது செய்தருளும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் கொஞ்சுகிளி மஞ்சணவுங் |
1.062.5 |
வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன். கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமான் ஆவான்.
672 |
தாவியவ னுடனிருந்துங் ஆவிதனி லஞ்சொடுக்கி நாவியல்சீர் நமிநந்தி கோவியலும் பூவெழுகோற் |
1.062.6 |
மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க் காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்தவன். தலைமை சான்றமலர் மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானாவான்.
673 |
கன்னவிலு மால்வரையான் சொன்னவிலு மாமறையான் மின்னவிலுஞ் செஞ்சடையான் கொன்னவிலுஞ் சூலத்தான் |
1.062.7 |
கற்கள் செறிந்த பெரிய கயிலாய மலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச் செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கும் எம்பெருமானாவான்.
674 |
அந்தரத்திற் றேரூரு சுந்தரத்தன் றிருவிரலா மந்திரத்த மறைபாட கொந்தரத்த மதிச்சென்னிக் |
1.062.8 |
ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால் விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேத கீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.
675 |
நாணமுடை வேதியனும் தாணுவெனை யாளுடையான் பாணனிசை பத்திமையாற் கோணலிளம் பிறைச்சென்னிக் |
1.062.9 |
ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப் பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறை மதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.
676 |
நம்பனைநல் லடியார்கள் கொம்பனையாள் பாகனெழிற் வம்பமருந் தண்காழிச் டின்பமர வல்லார்கள் |
1.062.10 |
அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெரு மானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.
677 |
நம்பனைநல் லடியார்கள் கொம்பனையாள் பாகனெழிற் வம்பமருந் தண்காழிச் டின்பமர வல்லார்கள் |
1.062.11 |
அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெரு மானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோளிலி - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோளிலியெம், பெருமானே, விளங்கும், திருக்கோளிலி, திருக்கோளிலியில், சம்பந்தன், எம்பெருமானாவான், கொண்டு, என்னும், பூங்கொம்பு, நம்பியிருப்பவனாய்ப், கணவனாய், செல்வம், உமையம்மையின், எய்துவர்க, அடியவர்கள், விரியும், ளீசனையே, நம்முடைய, தோன்றிய, பொருந்தப், வல்லவர்கள், அப்பெருமானையே, அடைவர், இன்பம், பதிகத்தால், சீகாழிப், பதியுள், வல்லார்கள், இத்தமிழ்ப், தண்ணிய, வம்பமருந், பெருமானாவான், பெருமான், நமிநந்தி, உடையவன், பாடிப், சிவந்த, திருமுறை, திருச்சிற்றம்பலம், இரண்டு, செய்தவன், மதியைச், பாகனெழிற், பெருமானை, தண்காழிச், வண்டமிழ்கொண், கொம்பனையாள், டென்றிருக்கும், நம்பனைநல், லடியார்கள், நாமுடைமா, டின்பமர