முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.063.திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.063.திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
1.063.திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
678 |
எரியார்மழுவொன் றேந்தியங்கை வரியார்வளையா ரையம்வவ்வாய் சரியாநாவின் வேதகீதன் பெரியான்பிரமன் பேணியாண்ட |
1.063.1 |
உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேத கீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?
679 |
பெயலார்சடைக்கோர்
திங்கள்சூடிப் கயலார்தடங்க ணஞ்சொனல்லார் இயலானடாவி யின்பமெய்தி வியலார்முரச மோங்குசெம்மை |
1.063.2 |
இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரக நோய்ப் படுத்தல் நீதியோ?
680 |
நகலார்தலையும் வெண்பிறையு பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் அகலாதுறையு மாநிலத்தில் புகலான்மலிந்த பூம்புகலி |
1.063.3 |
இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும், அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண்மையான பிறை மதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து, அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி செய்து போதல் நீதியோ?
681 |
சங்கோடிலங்கத் தோடுபெய்து அங்கோல்வளையா ரையம்வவ்வா செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ் வெங்கோத்தருமன் மேவியாண்ட |
1.063.4 |
கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித் தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?
682 |
தணிநீர்மதியஞ் சூடிநீடு பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் அணிநீருலக மாகியெங்கு துணிநீர்பணியத் தான்மிதந்த |
1.063.5 |
மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங்களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா ?
683 |
கவர்பூம்புனலுந் தண்மதியுங் அவர்பூம்பலியோ டையம்வவ்வா அவர்பூணரையர்க் காதியாய தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் |
1.063.6 |
அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க்கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழி நீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவர வந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச் சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியோ?
684 |
முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் தலையாய் கிடந்திவ் வையமெல்லாந் சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் |
1.063.7 |
கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப்பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழை மீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன் கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?
685 |
எருதேகொணர்கென் றேறியங்கை கருதேர்மடவா ரையம்வவ்வாய் ஒருதேர்கடாவி யாரமரு பொருதேர்வலவன் மேவியாண்ட |
1.063.8 |
ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத் தேர்களை அழியுமாறு சண்டையிடும் தேர் வல்லவன் ஆகிய சிபிச் சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?
686 |
துவர்சேர்கலிங்கப்
போர்வையாருந் கவர்செய்துழலக் கண்டவண்ணங் அவர்பூம்பலியோ டையம்வவ்வா தவர்செய்நெடுவேற் சண்டனாளச் |
1.063.9 |
உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கி ஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?
687 |
நிழலான்மலிந்த கொன்றைசூடி குழலார்மடவா ரையம்வவ்வாய் அழலாயுலகங் கவ்வைதீர கழனாகரையன் காவலாகக் |
1.063.10 |
உலகம் அழலாக வெதும்பி வருந்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக் கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப் பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?
688 |
கட்டார்துழாயன் றாமரையா சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் நட்டார்நடுவே நந்தனாள கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் |
1.063.11 |
ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழி போகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத்தையும் அளித்து அம்முனிவனை வாழச் செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?
689 |
கடையார்கொடிநன் மாடவீதிக் நடையார்பனுவன் மாலையாக படையார்மழுவன் மேன்மொழிந்த கடையாவினைகள் உலகில்நாளும் |
1.063.xxx |
வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப் பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற் பாடிய பல் பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வவ்வுதியே, என்னும், நீதியோ, மகளிர், இறைவனே, அவர்கள், அணிந்த, பிச்சையை, சென்று, எழுந்தருளிய, செய்து, கவர்ந்து, சிறப்பினதும், ரையம்வவ்வாய், தையம்வவ்வாய், மாட்டயலே, கொள்ளாது, அவர்களின், அழகினைக், யானலம், யமர்ந்தவனே, புரத்தானே, புண்ணியனே, பதியில், கையில், வளையல்களை, அவர்தம், வழிபட்டு, கொண்டு, வாழும், மாலையாக, வருந்தும், ஆடைகளை, திரிந்து, அவர்பூம்பலியோ, சீகாழிப், புரிந்த, திரண்ட, பிச்சை, பொருந்திய, டையம்வவ்வா, தலைவனாகிய, திருமால், மகளிர்தரும், ஏற்பது, கண்டுயில், மண்ணுலகம், நடத்தி, விளங்கும், யிடுதலை, பல்பெயர்ப்பத்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், அவர்களை, நகரில், மேவியாண்ட, வெங்குரு, மேயவனே, செங்கோல், அளித்து, விரகதாபம், மதியையும், குளிர்ந்த, திருப்பிரமபுரம், எழுந்தருளியவனே