முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.064.திருப்பூவணம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.064.திருப்பூவணம்
1.064.திருப்பூவணம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்.
தேவியார் - மின்னாம்பிகையம்மை.
690 |
அறையார்புனலு மாமலரு குறையார்மதியுஞ் சூடிமாதோர் முறையார்முடிசேர் தென்னர்சேரர் திறையாரொளிசேர் செம்மையோங்குந் |
1.064.1 |
ஆரவாரித்து வரும் கங்கையும், ஆத்தி மலரும், ஆடும் பாம்பும் பொருந்திய சடையின் மேல், ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி மாதொர் பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய இடம், நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும், வையை ஆற்றின் அலைகள் வீசுவதும், புகழோடு கூடியதும், வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.
691 |
மருவார்மதின்மூன் றொன்றவெய்து ஒருபால்பாக மாகச்செய்த கருவார்சாலி யாலைமல்கிக் திருவான்மலிந்த சேடர்வாழுந் |
1.064.2 |
பகைவர்களாகிய திரிபுர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலையரையன் மகளாகிய பார்வதி தேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக் கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வ வளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.
692 |
போரார்மதமா வுரிவைபோர்த்துப் காரார்கடலி னஞ்சமுண்ட பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் சீரார்வாரி சேரநின்ற |
1.064.3 |
போர்ப் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்து, திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய், கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனாய், நுதல் விழி உடையவனாய் விளங்கும் சிவனது ஊர், நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு வாய்க்கால் வழியே பரப்பிப்பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.
693 |
கடியாரலங்கற் கொன்றைசூடிக் கொடியார்வெள்ளை யேறுகந்த படியார்கூடி நீடியோங்கும் செடியார்வைகை சூழநின்ற |
1.064.4 |
மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட குழை அணிந்தவனாய், வெண்மையான விடைக் கொடியைத் தனக்குரியதாகக் கொண்டவனாய், கோவணம் அணிந்தவனாய் விளங்கும் சிவபிரானது இடம், நிலவுலக மக்கள் ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப் புதர்கள் நிறைந்த வைகை யாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.
694 |
கூரார்வாளி சிலையிற்கோத்துக் போரார்வில்லி மெல்லியலாளோர் ஆராவன்பிற் றென்னர்சேரர் தேரார்வீதி மாடநீடுந் |
1.064.5 |
கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி, கொடிகள் கட்டிப் பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த போர்வல்ல வில் வீரனும், மெல்லியலாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது இடம், குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும் மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.
695 |
நன்றுதீதென் றொன்றிலாத சென்றுபேணி யேத்தநின்ற குன்றிலொன்றி யோங்கமல்கு தென்றலொன்றி முன்றிலாருந் |
1.064.6 |
நன்மை தீமை என்பனவற்றுள் ஒன்றும் இல்லாதவனும், நான்கு வேதங்களை அருளியவனும், தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற இடம், பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற் படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும் அழகிய திருப்பூவணமாகும்.
696 |
பைவாயரவ மரையிற்சாத்திப் மெய்வாய்மேனி நீறுபூசி கைவாழ்வளையார் மைந்தரோடுங் செய்வார்தொழிலின் பாடலோவாத் |
1.064.7 |
படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக்கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்துவரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.
697 |
மாடவீதி மன்னிலங்கை கூடவென்றி வாள்கொடுத்தாள் பாடலோடு மாடலோங்கிப் ஓடிநீரால் வைகைசூழு |
1.064.8 |
மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து, அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ பிரானுக்குரிய இடம், ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும், பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.
698 |
பொய்யாவேத நாவினானும் கையாற்றொழுது கழல்கள்போற்றக் மையார்பொழிலின் வண்டுபாட செய்யார்கமலந் தேனரும்புந் |
1.064.9 |
என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும், மலர்மகள் கணவனாகிய திருமாலும், தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற, சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர், கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும், வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும், சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.
699 |
அலையார்புனலை நீத்தவருந் நிலையாவண்ண மாயம்வைத்த மலைபோற்றுன்னி வென்றியோங்கு சிலையார்புரிசை பரிசுபண்ணுந் |
1.064.10 |
அலைகள் வீசும் நீரில் நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய இடம், வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல் நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால் ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.
700 |
திண்ணார்புரிசை மாடமோங்குந் பெண்ணார்மேனி யெம்மிறையைப் நண்ணாருட்கக் காழிமல்கு பண்ணார்பாடல் பத்தும்வல்லார் |
1.064.11 |
வலிமை பொருந்திய மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில் பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம் தலைவனாகிய சிவபிரானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச் சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓத வல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூவணம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தென்றிருப், பூவணமே, திருப்பூவணமாகும், பொருந்திய, சிவபிரானது, விளங்கும், நிறைந்த, னிடமாம், பொன்னையும், அணிந்தவனாய், செய்யும், கொழித்து, மக்கள், தானிடமாம், ஞானசம்பந்தன், சிவந்த, வெற்றி, வேதங்களை, மணிகளையும், கருநிறம், அலைகள், பாண்டியர், சிவபிரான், திருச்சிற்றம்பலம், திருமுறை, மதில்கள், பன்மணி, திருப்பூவணம், கொண்டு, ஒருசேர, தோன்றிய