முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 380. சேய்மையும் அணிமையும்!
புறநானூறு - 380. சேய்மையும் அணிமையும்!
380. சேய்மையும் அணிமையும்!
தென் பவ்வத்து முத்துப் பூண்டு வட குன்றத்துச் சாந்தம் உரீ இ. . . . . . . . ங்கடல் தானை, இன்னிசைய விறல் வென்றித், தென் னவர் வய மறவன், |
5 |
மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து, நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய, தேறுபெ. . . . . . . . த்துந்து, தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்; துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; |
10 |
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்; வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல, . . . த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்; அன்னன் ஆகன் மாறே, இந்நிலம் இலம்படு காலை ஆயினும், |
15 |
புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 378 | 379 | 380 | 381 | 382 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 380. சேய்மையும் அணிமையும்!, இவன், சேய்மையும், இலக்கியங்கள், அணிமையும், புறநானூறு, கந்தன், பிறந்த, தோர்க்கே, கூதளம், சங்க, தென், எட்டுத்தொகை