புறநானூறு - 379. இலங்கை கிழவோன்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்
பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன்
திணை:பாடாண்
துறை: பரிசில்
யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை; அவனே பெறுக, என் நாஇசை நுவறல்; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து, அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் |
5 |
நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம்; பெரும! குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்! நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா, வல்லன், எந்தை, பசிதீர்த்தல் எனக், |
10 |
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக், கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது. விண்தோய் தலைய குன்றம் பிற்பட, . . . . ரவந்தனென், யானே- தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத் |
15 |
திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 377 | 378 | 379 | 380 | 381 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 379. இலங்கை கிழவோன்!, அவன், இலங்கை, இலக்கியங்கள், கிழவோன், நான், சென்றார், வாழ்க்கை, புறநானூறு, அதனால், நாடு, புலவருக்கு, எட்டுத்தொகை, கிணைக்கலைஞன், புலவர், பரிசில், பெறுக, சங்க, கொன்வரல், வில்லியாதன், யானே