முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
புறநானூறு - 382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
கடல் படை அடல் கொண்டி, மண் டுற்ற மலிர் நோன்றாள், தண் சோழ நாட்டுப் பொருநன், அலங்கு உளை அணி இவுளி நலங் கிள்ளி நசைப் பொருநரேம்; |
5 |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் அவற் பாடுதும், அவன் தாள் வாழிய! என! நெய் குய்ய ஊன் நவின்ற பல்சோற்றான், இன் சுவைய நல் குரவின் பசித் துன்பின் நின் |
10 |
முன்நாள் விட்ட மூதறி சிறா அரும், யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக், கட்கேள்விக், சுவை நாவின் நிறன் உற்ற, அரா அப் போலும் வறன் ஒரீ இ, வழங்கு வாய்ப்ப, |
15 |
விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்! நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல் எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் |
20 |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், வென்ற தேர், பிறர் வேத்தவை யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 380 | 381 | 382 | 383 | 384 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!, இலக்கியங்கள், நடுங்க, கேட்டொறும், புறநானூறு, ஏத்துவேன், பரிசில், வேண்டும், கடுமான், நான், தோன்றல், அழகிய, உரியது, பொலிவு, நின், நிறம், போலப், அவன், நலங்கிள்ளி, சோழன், சங்க, எட்டுத்தொகை, கடல், பொருநன், தாள், பாடிப், இவுளி, நெய்