முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 230. நீ இழந்தனையே கூற்றம்!
புறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம்!
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல்.
துறை: கையுறுநிலை.
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும், களம்மலி குப்பை காப்பில வைகவும், விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல், வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள், |
5 |
பொய்யா எழினி பொருதுகளம் சேர- ஈன்றோர் நீத்த குழவி போலத், தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக், கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி |
10 |
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்! வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான், வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின், நேரார் பல்லுயிர் பருகி, ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 228 | 229 | 230 | 231 | 232 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம்!, இவன், இலக்கியங்கள், எழினி, கூற்றம், இழந்தனையே, புறநானூறு, தங்கும்படியாகவும், உலகமே, இவனது, செங்கோல், சங்க, எட்டுத்தொகை, உழவன்