புறநானூறு - 232. கொள்வன் கொல்லோ!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம்.
இல்லா கியரோ, காலை மாலை! அல்லா கியர், யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி, நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ- கோடு உயர் பிறங்குமலை கெழீஇய |
5 |
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 230 | 231 | 232 | 233 | 234 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 232. கொள்வன் கொல்லோ!, கொள்வன், இலக்கியங்கள், புறநானூறு, வாழும், கொல்லோ, இவன், பெற்றுக்கொள்வானா, அவன், நாட்டையே, தான், பீலி, காலை, எட்டுத்தொகை, சங்க, திணை, துறை, மாலை