முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 228. ஒல்லுமோ நினக்கே!
புறநானூறு - 228. ஒல்லுமோ நினக்கே!
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப் பையுள்.
கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே! இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை, நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே! அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்? |
5 |
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை, விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் |
10 |
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின், அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம் இருநிலம் திகிரியாப், பெருமலை மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 226 | 227 | 228 | 229 | 230 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 228. ஒல்லுமோ நினக்கே!, இலக்கியங்கள், ஒல்லுமோ, நினக்கே, தாழி, பலர், உன்னால், கோவே, புலவர், புறநானூறு, வளவன், எட்டுத்தொகை, வனைதல், அளவு, செய்யும், சங்க, இவன், தேவர், சூளை, தன்ன, புகழ்ந்த, ஞாயிறு, கலஞ்செய், செம்பியர், உலகம்