முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 217. நெஞ்சம் மயங்கும்!
புறநானூறு - 217. நெஞ்சம் மயங்கும்!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்;
அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது. நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
5 |
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக, இனையதோர் காலை ஈங்கு வருதல்; வருவன் என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; |
10 |
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை இழந்தஇவ் வுலகம் என்னா வதுகொல்? அளியது தானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 215 | 216 | 217 | 218 | 219 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 217. நெஞ்சம் மயங்கும்!, இலக்கியங்கள், பிசிராந்தையார், நெஞ்சம், உள்ளது, மயங்கும், சான்றோன், புறநானூறு, பெருமையும், அறிவும், வியப்பாக, இங்கு, வருதல், வியத்தொறும், உடைத்தே, சங்க, எட்டுத்தொகை, பொத்தியார், காலை, பிறன், மருட்கை, போற்றி