முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 215. அல்லற்காலை நில்லான்!
புறநானூறு - 215. அல்லற்காலை நில்லான்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது.
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாதொரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
5 |
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே; செல்வ்க் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன் மன்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 213 | 214 | 215 | 216 | 217 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 215. அல்லற்காலை நில்லான்!, இலக்கியங்கள், நில்லான், புறநானூறு, அல்லற்காலை, பாண்டிய, என்னும், பிசிர், காலத்தில், அவரைக்காய், என்னிடம், காலை, நான், அவைப்புறு, சங்க, எட்டுத்தொகை, சோழன், அவன், வாக்கல், வரகின், அவரை