முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 80. மருதம் - பரத்தை கூற்று
குறுந்தொகை - 80. மருதம் - பரத்தை கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட பரத்தை அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாம தயர்கம் சேறும் தானது அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி |
5 |
முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. |
|
- அவ்வையார். |
முடிபு: யாம் துறை விரும்பிச் சேறும்; தான் அஞ்சுவதுடையளாயின் கொழுநன் மார்பைக் காக்க.
கருத்து: தலைவன் என்னுடைய விருப்பப்படியே ஒழுகுவானே யன்றித் தலைவி விரும்பியவாறு ஒழுகான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 80. மருதம் - பரத்தை கூற்று, பரத்தை, இலக்கியங்கள், கூற்று, யாம், மருதம், தலைவி, குறுந்தொகை, பெரிய, கொழுநன், சேறும், எட்டுத்தொகை, விரும்பி, சங்க