முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 81. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 81. குறிஞ்சி - தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)
இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப் புதுநலன் இழந்த புலம்புமார் உடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் |
5 |
கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே. |
|
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். |
முடிபு: இவள் நலன் இழந்த புலம்புடையாள்; எம் சிறு நல்லூர் உதுக்காண்; உள்ளல் வேண்டும்.
கருத்து: இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 81. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வேண்டும், குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, கடலும், மறவாது, உள்ளல், எம்மை, வந்து, எட்டுத்தொகை, சங்க, இழந்த, உதுக்காண்