முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 210. முல்லை - தோழி கூற்று
குறுந்தொகை - 210. முல்லை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்தநன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)
திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு |
5 |
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. | |
- காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
முடிபு: சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.
கருத்து: காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி,யான் தலைவியை ஆற்றுவித்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 208 | 209 | 210 | 211 | 212 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 210. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், முல்லை, காக்கை, குறுந்தொகை, தோழி, கூற்று, காக்கையது, செய்த, கரைந்த, சங்க, எட்டுத்தொகை, விளைந்த