முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 208. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரும் நாடனொ டொன்றேன் றோழி ஒன்றினானே. |
5 |
- கபிலர். |
முடிபு: தோழி, ஒன்றேனல்லேன்; ஒன்றுவென்; ஒன்றனானேஒன்றேன்.
கருத்து: தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று யான் ஆற்றேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 206 | 207 | 208 | 209 | 210 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, நொதுமலர், குறுந்தொகை, தலைவி, கூற்று, தோழி, யான், தலைவனோடு, ஒன்றுவென், தலைவர், எட்டுத்தொகை, சங்க, ஆயினும்