முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 185. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 185. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்!” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந் தின்ன ளாகுத னும்மி னாகுமெனச் சொல்லி னெவனாந் தோழி பல்வரிப் பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக் |
5 |
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள் கன்மிசைக் கவியு நாடற்கென் நன்மா மேனி யழிபடர் நிலையே. |
|
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். |
முடிபு: தோழி, நாடற்கு என் மேனி நிலையை இன்ளகுதல்நும்மினாகுமெனச் சொல்லின் எவனாம்?
கருத்து: தலைவன் இராவந் தொழுகுவதனால் நான் வேறுபட்டமையை அவனுக்கு நீ அறிவிப்பாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 185. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தோழி, மேனி, நிலையை, காந்தள், சங்க, எட்டுத்தொகை, போலக்