முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 187. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 187. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, அவன் மேற்குறையேற்றி உரையாடிய தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று தலைவி கூறியது.)
செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப் பெருவரை நீழ லுகளு நாடன் கல்லினும் வலியன் தோழி வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே. |
5 |
- கபிலர். |
முடிபு: தோழி, நாடன் வலியன்; என் நெஞ்சு மெலியும்.
கருத்து: தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 185 | 186 | 187 | 188 | 189 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 187. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, அவன், தோழி, குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, நெஞ்சு, வலியன், நாடன், எட்டுத்தொகை, விரைவில், சங்க