முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 174. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும் அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் |
5 |
பொருளே மன்ற பொருளே அருளே மன்ற ஆருமில் லதுவே. |
|
- வெண்பூதியார். |
முடிபு: அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள் வயிற்பிரிவாராயின், பொருளே பொருள்; அருளே ஆரும் இல்லது.
கருத்து: அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, பொருளே, கூற்று, மன்ற, குறுந்தொகை, என்னார், அரிய, நத்துறந்து, அருளே, பொருள், அத்தம், பிரிந்து, சங்க, எட்டுத்தொகை, பொருள்வயிற், கடத்தற்கரியன, உலகத்தில், வென்று, போலும்