முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 173. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 173. குறிஞ்சி - தலைவன் கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)
பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க வேறி நாணட் டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப இன்னள் செய்த திதுவென முன்னின் |
5 |
றவள் பழி நுவலு மிவ்வூர் ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா றுளெனே. |
|
- மதுரைக் காஞ்சிப்புலவன். |
முடிபு: கலிமா ஏறி நாண் அட்டு நோய் சிறப்ப இன்னள் செய்தது இதுவென, இவ்வூர் அவள் பழி நுவலும்; ஆங்கு உணர்ந்தமையின் ஏகுமாருளென்.
கருத்து: நான் இனி மடலேறுவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 171 | 172 | 173 | 174 | 175 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 173. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, இன்னள், சிறப்ப, மேலும், சங்க, எட்டுத்தொகை, அவள், நான்