முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 165. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)
மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை அருங்கரை நின்ற உப்பொய் சகடம் பெரும்பெய றலையவீந் தாங்கியவள் இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. |
5 |
- பரணர். |
முடிபு: சகடம் வீந்தாங்கு இவள் கூந்தல் அணிகண்டு நறவுண்டாங்கு நீ வெய்துற்றனை.
கருத்து: நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, சகடம், நின்ற, கூந்தல், சங்க, எட்டுத்தொகை, றலையும்