முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 164. மருதம் - காதற்பரத்தை கூற்று
குறுந்தொகை - 164. மருதம் - காதற்பரத்தை கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட காதற்பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையிற் புலக்கும் |
5 |
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. | |
- மாங்குடி மருதனார். |
முடிபு: தோழி, மனையோள் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின், பவ்வம் அணங்குக.
கருத்து: தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 162 | 163 | 164 | 165 | 166 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 164. மருதம் - காதற்பரத்தை கூற்று, இலக்கியங்கள், காதற்பரத்தை, மருதம், தோழி, தலைவி, கூற்று, குறுந்தொகை, அணங்குக, புலக்கும், மனையோள், பவ்வம், வாளை, எட்டுத்தொகை, எம்மைக், கடல், சங்க