முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 144. பாலை - செவிலித்தாய் கூற்று
குறுந்தொகை - 144. பாலை - செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)
கழிய காவி குற்றும் கடல வெண்டலைப் புணரி யாடியும் நன்றே பிரிவி லாய முரியதொன் றயர இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப் பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ |
5 |
சென்மழை தவழும் சென்னி விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே. |
|
- மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார். |
முடிபு: ஆயம் அயர இவ்வழிப்படுதலும் ஒல்லாள்; விலங்கு மலைநாட்டில் அவ்வழிச் சென்றனள்.
கருத்து: தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 144. பாலை - செவிலித்தாய் கூற்று, இலக்கியங்கள், செவிலித்தாய், பாலை, தலைவி, சென்றனள், கூற்று, குறுந்தொகை, ஒல்லாள், பிரிந்து, சங்க, எட்டுத்தொகை, தலைவனுடன்